'செஞ்சோற்றுக்கடன்களை' கருணா தீர்த்துக் கொள்ள முடியாது திண்டாடுவது அவரின் B.B.C பேட்டியிலிருந்து தெளிவாகிறது. இந்த 'சீத்துவத்துக்குள்' ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அவர் பேட்டியினூடாக ஆலோசனை கூறியது நகைப்புக்கிடமானது.
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை போட்டியில் களம் இறக்கியதுகூட ராஜபட்சவின் ராஜதந்திரம்தானோ?????
சிவாஜிலிங்கத்தைப்பற்றி சிந்திப்பதை விடுத்து, அவருக்கு வாக்களித்த தமிழ் கடும் போக்காளர்களை(9882) முன்னிறுத்தி சிந்திக்க வேண்டும் என்பதே கடந்த கால போராட்டங்களை ஏற்றுக் கொண்டவர்களின் ஆதங்கம் ஆகும்.
சரத் பொன்சேகாவுக்குரிய 14 இலட்சம் வாக்குகளும் மகிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளன என்ற செய்தி இராணுவப் புரட்சிக்கான எச்சரிக்கை மணியாக கொள்ளலாம்.
தற்செயலாக ஆட்சிக்கு வந்த இருவரும் தற்காலிகமாகவே அரசியலில் தங்கப் போகின்றார்கள் என்ற உண்மையை இத் தேர்தல் ஓங்கிக் கூறியுள்ளது. கிழக்கில் கிடைத்த பெருவெற்றியானது தமிழ் பேசும் இனங்களுக்கிடையே மீண்டும் மலர்ந்த ஒற்றுமையாகும்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்தத்தை நடாத்தி வந்த போராளிகளுக்கு இத் தேர்தல் கூறும் வெற்றிச்செய்தியானது 'எச்சந்தர்ப்பத்திலும் தமிழ் பேசும் மக்களை இலங்கையின் சம பிரஜையாக ஒருபொழுதும் சிங்களம் ஏற்றுக்கொள்ளாது என்பதால் விருப்பு வெறுப்புகளுக்கப்பால் பிரிந்து வாழ்வதுதான் ஒரே வழி' என்பதாகும்.
சுவிஸ் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஓர் ஒழுங்கு முறையின் கீழ் வாழ்ந்து பழக்கப்பட்ட தமிழ்மக்கள், இலங்கை தேர்தல் வாக்களிப்பில் இருந்து முற்றிலும் மாறுபாடாக, நேர்மை தன்மையுடன் வாக்களித்ததை குறிப்பிட்டாக வேண்டும்.<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>