சுயநலத்திற்காக மாறியவர்கள் என்ற வரிசையில் காட்டிக்கொடுத்தவர்கள், அரசுக்கு சோரம் போனவர்கள், ஒட்டுக்குழுக்கள் போன்றவர்களின் செயற்பாடுகள் துரோகத்தனமென இனம்கண்டு விடுதலைப்புலிகளால் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களின் காரணங்கள் இப்போது நியாயப்படுத்தப்படலாம்.
தமிழ் கட்சிகளின் பிளவு, தமிழ்மக்களின் மனங்களிலிருந்த மாவீரர் தியாகங்களையும், தேசியத்தையும் மறக்கடிக்கப்பட்டு விடுமோ என்ற பயம், தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதை உணர்தல் அவசியம்.
தீர்வு பற்றி ஊடகங்களுக்கு அறிக்கைவிடும் புத்திஜீவிகள் எழுந்த மானமாக போதிப்பதை விடுத்து தீர்வை குறித்துரைத்து அறிக்கையிடுதல் ஆரோக்கியமானது.<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 Next >>