<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Thanall</title>
	<atom:link href="http://www.thanall.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.thanall.com</link>
	<description>தணல்</description>
	<lastBuildDate>Tue, 31 Aug 2010 18:22:21 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>தியாகி திலீபனின் தீர்க்க தரிசனங்களும் நிதர்சனங்களும்</title>
		<link>http://www.thanall.com/?p=444</link>
		<comments>http://www.thanall.com/?p=444#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 14:33:29 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=444</guid>
		<description><![CDATA[&#8216;மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம்&#8216; 
ஐந்து தசாப்த காலங்களுக்கு மேலாக ஈழத்தமிழ்மக்களின் உரிமைக்கான போரியல் வரலாற்றில் தியாகி திலீபனின் தற்கொடைப்போராட்டம் ஒரு திருப்பு முனையானதாகும்.
தற்கொலை என்பது கோழைகளின் மொழி
தற்கொடை என்பது தியாகிகளின் மொழி
காந்தீய தேசத்திற்கு மட்டுமல்ல, அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட முழு உலகத்திற்கும் அகிம்சைப்போரின் மகத்துவத்தை போதித்தவன் தியாகச்சுடர் திலீபன். 
1987 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 15 ம் நாள் தியாகி திலீபனின் அஸ்தமனத்தோடு அறப்போரின் முற்றுப்புள்ளி அதுவென ஏமாந்தவர்கள் ஏராளம். ஈழப்போர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-family: Tahoma;"><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/Thileepan.bmp"><img class="alignleft size-full wp-image-445" title="Thileepan" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/Thileepan.bmp" alt="" /></a></span>&#8216;<span style="font-family: Tahoma;">மனிதனென்பவன் தெய்வமாகலாம்</span></p>
<p><span style="font-family: Tahoma;">வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்</span></p>
<p><span style="font-family: Tahoma;">வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம்</span>&#8216; <span id="more-444"></span></p>
<p><span style="font-family: Tahoma;">ஐந்து தசாப்த காலங்களுக்கு மேலாக ஈழத்தமிழ்மக்களின் உரிமைக்கான போரியல் வரலாற்றில் தியாகி திலீபனின் தற்கொடைப்போராட்டம் ஒரு திருப்பு முனையானதாகும்</span>.</p>
<p><span style="font-family: Tahoma;">தற்கொலை என்பது கோழைகளின் மொழி</span></p>
<p><span style="font-family: Tahoma;">தற்கொடை என்பது தியாகிகளின் மொழி</span></p>
<p><span style="font-family: Tahoma;">காந்தீய தேசத்திற்கு மட்டுமல்ல</span>, <span style="font-family: Tahoma;">அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட முழு உலகத்திற்கும் அகிம்சைப்போரின் மகத்துவத்தை போதித்தவன் தியாகச்சுடர் திலீபன்</span>. </p>
<p>1987 <span style="font-family: Tahoma;">ம் ஆண்டு புரட்டாதி மாதம் </span>15 <span style="font-family: Tahoma;">ம் நாள் தியாகி திலீபனின் அஸ்தமனத்தோடு அறப்போரின் முற்றுப்புள்ளி அதுவென ஏமாந்தவர்கள் ஏராளம்</span>. <span style="font-family: Tahoma;">ஈழப்போர் வரலாற்றில் மிகப்பெரிய பாரதப் படையணியினருக்கெதிரான மறப்போர்த் தடத்தின் தொடக்கப்புள்ளி என்பதை பலர் உணர மறுத்திருந்தனர்</span>. <span style="font-family: Tahoma;">அவர்களுக்கெல்லாம் திலீபனின் தற்கொடை பெரும் சாட்டையடி</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">திலீபனின் ஆகுதியில் தர்மமிருந்தது</span>! <span style="font-family: Tahoma;">நீதியிருந்தது</span>! <span style="font-family: Tahoma;">நேயமிருந்தது</span>! <span style="font-family: Tahoma;">அதனால் தான் அவனையும் அவன் கொள்கையையும் இன்றுவரை மக்கள் மனதில் கலங்கரை விளக்காக வைத்திருக்கிறார்கள்</span>. <span style="font-family: Tahoma;">அகிம்சைப் போரினூடாக தன்னை ஈந்த திலீபனின் அர்பணிப்புக்கு பின்னால் மறைந்து கிடக்கும் தீர்க்க தரிசனங்கள் யாவை</span>? <span style="font-family: Tahoma;">அவை இன்றுவரை எதை உணர்த்துகிறது</span>? <span style="font-family: Tahoma;">தமிழர் தாயகத்திற்காக தியாகச் செம்மலால் முன்வைக்கப்பட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளின் நிறைவேறியவை தான் எத்தனை</span>? <span style="font-family: Tahoma;">இயல்பாக</span>, <span style="font-family: Tahoma;">விடையின்றி எம்முள்ளே பொசுங்கிக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை</span>. <span style="font-family: Tahoma;">இந்தக் கோரிக்கைகளினூடாக நிஜத்தின் விம்பமாக தமிழ்மக்களின் மனத்திரைகளில் நிதர்சனமாக வாழ்ந்துவருவது தவிர்க்க முடியாததாகின்றது</span>. </p>
<p><span style="font-family: Tahoma;"><strong>திலீபனின் கோரிக்கைகள்</strong></span> </p>
<p>* <span style="font-family: Tahoma;">மீள்குடியமர்வு என்ற பெயரில் புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல்</span></p>
<p>* <span style="font-family: Tahoma;">சிறையிலும் தடுப்பு முகாம்களிலும் தகுந்த காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க்கைதிகளை விடுதலை செய்தல்</span>.</p>
<p>* <span style="font-family: Tahoma;">இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நீக்குதல்</span>.</p>
<p>* <span style="font-family: Tahoma;">ஊர்காவல்</span>, <span style="font-family: Tahoma;">கூலிப்படையினரின் ஆயுதங்களைக் களைதல்</span>.</p>
<p>* <span style="font-family: Tahoma;">தமிழ்ப் பிரதேசங்களில் புதிய காவல்நிலையங்கள் அமைத்தலை நிறுத்தல்</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">திலீபனின் இன்றுவரையிலான  தீர்க்கதரிசனத்தை உறுதிப்படுத்துவதன் பொருட்டு சில நிகழ்வுகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாக அமையும்</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர்க்கிழக்கு</span>, <span style="font-family: Tahoma;">திரியாய் போன்ற பல பிரதேசத்து மக்கள் மோதல் காரணமாக முற்றாக இடம்பெயர்ந்தது அறியப்பட்டதே</span>. <span style="font-family: Tahoma;">இதுவரைக்கும் தமிழ்மக்கள் மீளக்குடியேற்றப்படவில்லை</span>. <span style="font-family: Tahoma;">வரலாற்றுக்காலங்களையும் தாண்டி தாயகத்திலே புரான தமிழ்க் கிராமங்களில் தற்பொழுது புதிதாக புத்தர் சிலைகள் முளைத்து வருகின்றன</span>. <span style="font-family: Tahoma;">இது விடயமாக எத்தனை எதிர்ப்புக் குரல்கள் எழும்பியும் இலங்கை அரசை அசைக்க முடியாமல் உள்ளது</span>. <span style="font-family: Tahoma;">அதோடு இணைந்ததாக சிங்களக் குடியேற்றங்களும் அவர்களின் பாதுகாப்புக்காக காவல் நிலையங்களும் இன்றுவரை நடைபெற்றுக்கொண்டிருப்பதை அறிவோம்</span>. <span style="font-family: Tahoma;">தியாகி திலீபனின் கோரிக்கைகளில் முதலாவதும் இறுதியானதும் இன்றுவரை நிதர்சனமாகி வருவதற்கான சில உதாரணங்களாகும்</span>. </p>
<p><span style="font-family: Tahoma;"><strong>இலங்கை அரசின் உயர் பாதுகாப்பு வலயங்கள்</strong></span> </p>
<p><span style="font-family: Tahoma;">இலங்கையின் பேரினவாதிகள் தங்களுக்கு சாதகமாகவும் தமிழ்மக்களுக்கு பாதகமாகவும் நடைமுறைப்படுத்துவதற்கென இரு சொற்பிரயோகங்களை காலம் காலமாக பாவித்து வருவது ஒரு தந்திரமாகும்</span>. <span style="font-family: Tahoma;">ஒரு வரையறைக்குள்ளும் கட்டுப்பட வைக்காமல் ஒரு </span>&#8216;<span style="font-family: Tahoma;">வழுவல்</span>&#8216; <span style="font-family: Tahoma;">தன்மையை ஏற்படுத்துவது இலங்கை அரசின் வழக்கமாகும்</span>.</p>
<p><span style="font-family: Tahoma;">ஒன்று </span>&#8216;<span style="font-family: Tahoma;">பாதுகாப்பு வலயம்</span>&#8216; <span style="font-family: Tahoma;">மற்றையது </span>&#8216;<span style="font-family: Tahoma;">அபிவிருத்தி</span>&#8216;. <span style="font-family: Tahoma;">இவை இரண்டினூடாக தேவையான போது தமிழ்மக்களை குடியகற்றவும்</span>, <span style="font-family: Tahoma;">சிங்கள மக்களை குடியேற்றவும் இலங்கை அரசினால் பிரயோகப்படுத்தப்படுகிறது</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">மூதூர்க் கிழக்கைச் சார்ந்த மக்களும்</span>, <span style="font-family: Tahoma;">பலாலி பகுதி மக்களும் </span>&#8216;<span style="font-family: Tahoma;">உயர் பாதுகாப்பு வலயம்</span>&#8216; <span style="font-family: Tahoma;">என்ற போர்வையில் குடியகற்றப்பட்டதை நினைவில் கொள்ளலாம்</span>. <span style="font-family: Tahoma;">அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகம் பறிபோவதும், இணைந்ததாக முஸ்லிம் தமிழ் மக்களின் அடையாளங்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் நாளாந்தம் மேற்கொள்வதை</span>யும்<span style="font-family: Tahoma;"> அறியலாம்</span>. <span style="font-family: Tahoma;">இவற்றுக்கும் மேலாக தடுப்பு முகாம்களையும் காவல் நிலையங்களையும் தமிழர் பகுதிகளில் நிறுவி</span>, <span style="font-family: Tahoma;">அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை ஊக்குவிப்பதற்கான சக்திகளை அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது</span>. <span style="font-family: Tahoma;">காவல் நிலையங்கள் திறக்கப்படுவது நாட்டு மக்களை சட்ட விரோத செயல்களில் இருந்து தடுப்பதற்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்குமாகும்</span>.</p>
<p><span style="font-family: Tahoma;">இலங்கையின் குறிப்பாக தமிழ்மக்களின் வாழ்வியலுக்கு அச்சுறுத்தலாக அமைவது காவல் நிலையங்களாகும்</span>. <span style="font-family: Tahoma;">தமிழர் பகுதியில் ஒரு காவல் நிலையம் அமைக்கப்பட்டால் இளம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் &#8216;இயமன் வந்திறங்கிய&#8217; பயமாக இருக்கும்</span>. <span style="font-family: Tahoma;">இவைகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக சிந்தித்துப் பார்க்கையில் தியாகி திலீபன் முன்வைத்த கோரிக்கைகளிலுள்ள நியாயங்கள் வெளித்தெரியும்</span>. <span style="font-family: Tahoma;">அவனது தற்கொடையிலும் அர்த்தம் இருக்கும்</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">தியாகி திலீபனின் மரணம் அனைத்து தமிழ்பேசும் மக்களை நோக்கிய சுதந்திரத்திற்கான தூர நோக்கு</span>. <span style="font-family: Tahoma;">அதுவே சுதந்திர வாழ்விற்கான அறைகூவல்</span>. <span style="font-family: Tahoma;">வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டுமென கோஷமிடுபவர்கள் ஒருகணம் சிந்திக்க வேண்டுகிறேன்</span>. <span style="font-family: Tahoma;">வடக்கையும் கிழக்கையும் பிரித்ததன் பின் அமைந்த சூழலை சிந்தித்துப் பார்க்கவேண்டும்</span>. <span style="font-family: Tahoma;">பலவந்த</span>மான<span style="font-family: Tahoma;"> தமிழ்மக்கள் குடியகற்றலுக்கும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்துக்கும் இவர்களால் தீர்வுகாண முடியுமா</span>? <span style="font-family: Tahoma;">தாயினும் மேலான தாய்மண்ணை அன்னியவனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க தன்மானமுள்ள தமிழினத்தால் முடியாதென்பதை பிரதிபலிப்பதே தியாகச்சுடர் திலீபனின் தற்கொடை மரணமாகும்</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">தியாகி திலீபனின் மரணம் உலக அரங்கில் வாழும் தமிழ்மக்கள் மனதில் என்றுமே அழியாது நிற்கும்</span>. <span style="font-family: Tahoma;">அதற்கான பிரதான காரணம் யாதெனில் திலீபனால் முன்வைக்கப்பட்ட நியாயமிக்க </span>5 <span style="font-family: Tahoma;">கோரிக்கைகளையும் அரசு என்றுமே நிறைவேற்றாது என்பது காலம் கூறும் பதில்</span>. <span style="font-family: Tahoma;">இதற்கான வழிதான் என்ன என்பதை தமிழனாகப்பிறந்த ஒவ்வொருவரும் </span> நேர்மையாகவும் நியாயமாகவும் <span style="font-family: Tahoma;">சிந்திக்க வேண்டும்</span>. <span style="font-family: Tahoma;">தனிப்பட்ட தேவைகளையும் சுயநலங்களையும் புறம்தள்ளிவிட்டு பேதங்களுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைத்தல் வேண்டும்</span>.</p>
<p><span style="color: #ff0000;">&#8216;தேனீ கொட்டினால் உன்னோடு! </span></p>
<p><span style="color: #ff0000;"> </span><span style="color: #ff0000;">தேனெடுத்தால் எனக்கும் பங்கு&#8217; </span></p>
<p><span style="color: #ff0000;">என்ற நிலை தமிழ்பேசும் மக்களிடமிருந்து மறையவேண்டும். அனைவரும் சர்வதேசரீதியாக ஒற்றுமையாய் நின்று ஓங்கி அழுத்தம் கொடுத்தால் பேரினவாதிகள் நியாயத்தை நோக்கி வருவார்கள். இன்றைய இந்த கால கட்டத்தில் மெளனமாக இருப்பின் ஈழத்தமிழினம் முற்றாகவே தொலைந்துவிடும். தலைமுறை தலைமுறையாய் இந்த வரலாற்றுத் தவறுகள் தொடர்ந்துகொண்டே </span><span style="color: #ff0000;">வருமாயின் முடிவுதான் யாது?</span><span style="color: #ff0000;"> திலீபனின் மரணத்தில் ஒரு அர்த்தம் வேண்டுமென்றால் அவனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படல் வேண்டும். அவனது தற்கொடையை நினைவுகூருவதோடு மட்டுமல்லாது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான வழிவகைகளையும் கண்டு ஆராயவேண்டும். இல்லையெனில் தியாகி திலீபனின் கோரிக்கைகள் மட்டும் அவன்போன்று என்றுமே மரணமின்றி நிரந்தரமாய் வாழும். </span></p>
<p><span style="font-family: Tahoma;">கனக கடாட்சம்</span></p>
<p><a href="mailto:trincokadatcham@yahoo.com">trincokadatcham@yahoo.com</a></p>
<p><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="425" height="350" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="src" value="http://www.youtube.com/v/aj43_9BDz_8" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="350" src="http://www.youtube.com/v/aj43_9BDz_8"> </embed></object></p>
<p><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="425" height="350" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="src" value="http://www.youtube.com/v/yE0-m8O1nJw" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="350" src="http://www.youtube.com/v/yE0-m8O1nJw"></embed></object></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&amp;p=444</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கடமை</title>
		<link>http://www.thanall.com/?p=432</link>
		<comments>http://www.thanall.com/?p=432#comments</comments>
		<pubDate>Sat, 28 Aug 2010 21:40:22 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=432</guid>
		<description><![CDATA[ஈழத்தமிழ்மக்களின் அரசியல் நிலை மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒருமுனையில், தமிழ்த்தேசியத்தைப் பற்றுறுதியுடன் வரிந்துகொண்டுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களின் அரசியல் இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றது.
எதிர்முனையில் தென்னிலங்கை சிங்களத்துடன் கைகோர்த்து தமிழ்த்தேசியத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் சில சக்திகளும், தமிழ்க்கட்சிகளும் முற்பட்டு நிற்கின்றனர். ஆயுதப்போராட்டப் பின்னடைவில் ஏற்பட்ட வலுவிழப்பிலும், தனி சிங்கள தேசியக் கோட்பாட்டு சதிகளிலும் மாண்டு போகாமல், தமிழ்த்தேசியத்தின் இருப்பை நிலைநாட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது என்பதே ஒவ்வொரு தமிழனதும் முதல் எதிர்பார்ப்பு.
இலங்கைத்தீவைத் தனது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/TNA2.jpg"><img class="alignleft size-full wp-image-441" title="TNA" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/TNA2.jpg" alt="" width="122" height="65" /></a>ஈழத்தமிழ்மக்களின் அரசியல் நிலை மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒருமுனையில், தமிழ்த்தேசியத்தைப் பற்றுறுதியுடன் வரிந்துகொண்டுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களின் அரசியல் இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றது.</p>
<p><span id="more-432"></span>எதிர்முனையில் தென்னிலங்கை சிங்களத்துடன் கைகோர்த்து தமிழ்த்தேசியத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் சில சக்திகளும், தமிழ்க்கட்சிகளும் முற்பட்டு நிற்கின்றனர். ஆயுதப்போராட்டப் பின்னடைவில் ஏற்பட்ட வலுவிழப்பிலும், தனி சிங்கள தேசியக் கோட்பாட்டு சதிகளிலும் மாண்டு போகாமல், தமிழ்த்தேசியத்தின் இருப்பை நிலைநாட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது என்பதே ஒவ்வொரு தமிழனதும் முதல் எதிர்பார்ப்பு.</p>
<p>இலங்கைத்தீவைத் தனது முழுமையான ஆதிக்கத்திற்குள் கொண்டுவரும் நோக்கில் செயற்பட்டு வருகின்ற பௌத்தசிங்கள பேரினவாதஅரசு, தற்போது சிங்கள மயமாக்கலுக்கான செயற்பாடுகளை மிக வேகமாக முன்னெடுத்துச் செல்கின்றது. தமிழ்த்தேசிய அரசியல் இருப்பை இல்லாதொழித்தல், இனக்கலப்பைச் செய்வதன் மூலம் இனத்தின் அடையாளங்களை சிதைத்தல், சிங்கள குடியேற்றங்களை விஸ்தரிப்பதனூடாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற எண்ணக்கருவை இல்லாமல் செய்தல், தமிழர்களின் வளங்களையும் முதலீடுகளையும் சூறையாடுதல் என தென்னிலங்கை தனக்கு சாதகமான நிகழ்ச்சி நிரலை விரைவாகவும் பாரியளவிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.</p>
<p>அத்தகைய நிகழ்சித்திட்டங்கள் சிலவற்றில் தமிழர்கள் என்ற அடையாளத்தை தமது அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் சுயநல அரசியல்வாதிகளும்; விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர்கள் சிலரும் பௌத்த சிங்கள பேரினவாதிகளுடன் இறுக்கமாக கைகோர்த்து அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்புடையதாகச் செல்கின்றனர்.</p>
<p>இவர்களைப் பகடைக்காயகப் பயன்படுத்தி புனர்வாழ்வின் பெயரால் புலம்பெயர் தமிழ்மக்களின் உதவியை பெறுவது சிங்களத்தின் நோக்கங்களில் ஒன்று. அதற்கு மேலாக, புலம்பெயர் தமிழ்மக்களின் அரசியல் முன்னெடுப்பை திசைதிருப்பி குழப்புவதே பிரதான நோக்கம்.</p>
<p>இதன் மூலம், தமது பலத்தை தமிழர் தாயகத்தில் வலுவாக்குவாக்கி, தமிழ்த்தேசியம் சார்ந்த கட்சிகளை வலுவிழக்கச் செய்வது மட்டுமல்லாமல் தமிழ்த்தேசியம் நோக்கிய ஒருங்கிணைவை ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கும் தனது திட்டத்தை செயற்படுத்துவதில் அதீத தீவிரம் காட்டிவருகின்றது. இதற்காக, இறுதியாக நடந்தபோரில் ஏதிலிகளாக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, நீண்டகால யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும் தற்போது மிகவும் அவசியமாக செய்யப்படவேண்டிய ‘புனர்வாழ்வு’ என்ற விடயம் துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்படுகின்றது.</p>
<p>கடந்த பாராளுமன்ற தேர்தலில் பல்வகைப்பட்ட கருத்துருவாக்கங்களுக்கு மத்தியிலும் பெரும்பான்மை இடங்களில் தமிழ்த்தேசியத்தை கோட்பாடாகக் கொண்ட தமிழ்;த்தேசியக் கூட்டமைப்பை தமிழ்மக்கள் வெற்றிபெற வைத்ததினூடாக தமக்கு தேசியத்தின்பால் உள்ள உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியில் நகர்வதாக உணரப்படுவது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது. இதன்காரணமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கான மக்கள் ஆதரவுத்தளம் குறைந்துவிடுமோ என்ற ஐயம் எழுகின்றது.<br />
சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலை எதிர்கொண்டு செயற்படுவது நிச்சயமாக கடினமான காரியமாக இருந்தாலும் ‘முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை’ என்பது போல தமிழ்த் தேசியத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்தைக் கவனத்திலெடுத்து, அதைப்பாதுகாப்பதற்குப் பொருத்தமான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது அவசியமானது. தமிழ்தேசியத்தை வலுப்படுத்துவதற்கான அரசியற் செயற்பாடுகளை தாயகத்திலும் சர்வதேச ரீதியாகவும் ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்கின்ற அதேவேளை, தமிழ்மக்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டங்களையும் இணையாக முன்னெடுக்கவேண்டியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைபின் இன்றைய பிரதான கடமை.</p>
<p>பாதிக்கப்பட்ட தமிழ்மக்களிற்கு உதவிகளை வழங்க புலம்பெயர் தமிழ்மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஆனால் அது சரியாக மக்களை சென்றடையக்கூடிய வழிமுறை எது என்பதே அவர்களிடம் எழுகின்ற முதல் கேள்வி. இதை முன்னெடுப்பதற்குரிய அல்லது ஒழுங்குபடுத்தக்கூடிய தகுதியுள்ள அமைப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது காத்திரமான பங்கை வழங்கமுடியும், வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கான புனர்வாழ்வுப் பணிகளை முன்னின்று செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு கூட்டமைப்புக்கு இருக்கின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் சிற்சில உதவித்திட்டங்கள் ஆங்காங்கே நடைபெறுவது வரவேற்றக்கூடியதாகினும்; புலம்பெயர் தமிழ்மக்களின் உதவிகள் பெரியளவில் கிடைப்பதற்குரிய செயற்றிட்டம் ஒன்றை வகுக்காமை வருந்தத்தக்க விடயமே.</p>
<p>இத்தகைய வினைத்திறனற்ற செயற்பாட்டினால் ஏற்பட்ட இடைவெளியைப் பயன்படுத்தித்தான் புனர்வாழ்வு, அபிவிருத்தி என்பதன் பெயரில் புலம்பெயர் தமிழ்மக்களின் நிதிகளைப் பெற்று சிங்களத்தின் அரசியல் இருப்பை தமிழர் தாயகப்பிரதேசத்தில் பலப்படுத்தும் நோக்குடன் சிங்களமும் அவர்களிடம் மண்டியிட்ட சிலரும் முயற்சிக்கின்றனர். இதை புலம்பெயர் மக்கள் தெளிவாகப் புரிந்து செயற்படுவார்கள். எனினும் புலம்பெயர் தமிழ்மக்களின் உதவிகளை மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டியது கூட்டமைப்பிற்குரிய மிகமுக்கிய கடமை என்பதை குறிப்பணர்த்துவதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.</p>
<p>பல மாதங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அபிவிருத்தி தொடர்பாக ஒஸ்ரியாவில் நடந்த கலந்துரையடலில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் அவர்களும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதாக இணையத்தள வாயிலாக அறிய முடிந்தது. ஆனால் அக்கலந்துரையாடல் தீர்மானங்கள் என்ன? அக்கலந்தரையாடலில் எடுக்கப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழர் தாயகப்பகுதிகளில் என்ன விதமான புனர்வாழ்வு அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன? கூட்டமைப்பு வினைத்திறனாகச் செயற்பட்டுக்கொண்டிருக்குமாயின் புனர்வாழ்வை மையப்படுத்திய புதிய அமைப்புகள் உருவாக எப்படி வாய்ப்புக்கள் உருவாகின? கூட்டமைப்பால் இதை ஏன் ஒழுங்குபடுத்தி செயற்படுத்த முடியவில்லை? என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாது. தமிழ்மக்களுக்கு நல்லது செய்யும் நோக்குடன் எத்தனை கலந்துரையாடல்களையும் எங்கும் நடாத்தலாம். ஆனால், இருப்பிடத்தை இழந்து, வாழ்வாதாரத்தை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கும் மக்களுக்கு என்ன செய்யப்பட்டது என்பதே அந்த முயற்சிக்கான பலாபலனாக அமைய வேண்டும். இச்செயற்பாடுகளினூடாக மக்களின் எதிர்பார்ப்பை உருவாக்குவதும் பின்னர் அதைக் கிடப்பில் போடுகின்ற பெறுபேறு அற்ற செயல் திட்டமாகத்தான் தமிழரின் புனர்வாழ்வை கூட்டமைப்பு பயன்படுத்துகின்றதா? என்ற ஐயம் ஏற்படாமல் செயற்பட வேண்டியது மிக முக்கியமானது.</p>
<p>இன்றைய காலகட்டத்தில், தமிழ் தேசியத்திற்கான அரசியல் கட்சி என்ற நிலைக்கு அப்பால் தாயகத்தின் புனர்வாழ்வு, பொருண்மிய மேம்பாடு என்ற பரப்பையும் முழுமையாகப் பொறுப்பெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இருக்கின்றது. இரண்டு பரிமாணங்களையும் கையாள வேண்டிய பொறுப்பு தரப்பட்டிருக்கின்றது.</p>
<p>தமிழ்மக்களுக்கான புனர்வாழ்வுச் செயற்பாட்டை கூட்டமைப்பு துரிதமாக ஒழுங்குபடுத்த வேண்டுமாயின் அவசரகாலத்திட்டம், நீண்டகாலத்திட்டம் என இரண்டு வகையாக திட்டமிட்டு செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் மக்களுக்கு அவசரமாக செய்யப்படவேண்டிய திட்டங்களே தற்போதைய தேவை. பட்டினியில் இருப்பவனுக்கு உடனயாக தேவையானது முதலில் உணவு. அதை விடுத்து நாங்கள் பெரிய அளவில் செய்வதற்கான சில பொறிமுறைகளை உருவாக்குகின்றோம் என வெட்டிவியாக்கியானங்கள் பேசி காலங்கடத்துவது பொருத்தமானதல்ல.</p>
<p>இதன் முதற்கட்டமாக நிவாரண பொறிமுறையை உடனடியாக உருவாக்கி செயற்படுத்தல் வேண்டும். உதாரணமாக உதவி நிறுவனத்தை அமைத்துதான் புனர்வாழ்வு உதவி பெறமுடியுமாயின் அதை உருவாக்கும் செயன்முறையை தொடங்கிவிட்டு, தற்காலிக ஏற்பாடாக புனர்வாழ்வு செய்ய வேண்டிய கிராமங்களை தெரிவுசெய்து பொதுமக்கள் கொண்ட பிரதான குழுக்களை உருவாக்கி அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கை பதிவுசெய்து மக்களுக்கான அத்தியாவசிய உதவியை துரிதமாக வழங்கலாம். மேலும் படிப்படியாக வாழ்வாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான வேலைத்திட்டங்களையும் செயற்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு, தொழில் முயற்சிக்கான வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீடு போன்ற முதன்மைத்துறைகளை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.</p>
<p>இலங்கைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தமிழ்மக்களின் அரசியல் ரீதியான பேரம்பேசும் நிலையை உயர்த்தி வைத்திருந்தது. அவர்களின் பின்னடைவிற்கு பின், தமிழ் மக்களின் அரசியல் தீர்வைப் பெறுவதற்காகப் பொருத்தமான வழிமுறையை பரந்துபட்ட கலந்தரையாடல்களினூடாக சகல தமிழ்மக்களின் ஆதரவுடன் முன்னெடுப்பது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் உள்ள முக்கிய சவால்.</p>
<p>நீண்டகாலப் பொறிமுறையைக் கொண்ட சிங்களமயமாக்கல், இனத்தின் அடையாளத்தைச் சிதைத்தல், இனக்கலப்பை செய்தல், குடியேற்றங்களை மேற்கொள்ளுதல், வளங்கள்-மூதலீடுகள் சூறையாடப்படுதல் போன்றவற்றை தடுக்க பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தமிழ்மக்களின் சுதந்திரம், பாதுகாப்பு, இனத்தின் உரிமைகள் பேணப்படுவதற்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.</p>
<p>இலங்கைத்தீவில் இனப்படுகொலை, யுத்தக் குற்றச்சாட்டுகள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் போன்ற உரிமை மீறல் விவகாரத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்மக்கள் தனித்துவமாக தம்மைத்தாமே ஆளும் உரிமையுடன் கூடிய ஒரு அரசியல் தீர்வை பெறுவது தொடர்பான அரசியல் செயற்றிட்டத்தை மேற்கொள்வது மிக அவசியமானது. இதற்காக புலம்பெயர் தமிழ்மக்களுடனும் வெளிப்படையான கலந்துரையாடலை மேற்கொண்டு அதனூடாக ஒரு ஒருங்கிணைந்த செயற்றிட்டத்தை உருவாக்க வேண்டும். அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் களமும் புலமும் செயற்பட வேண்டும். முக்கியமாக அரசியல் நகர்விற்கான முடிவுகளை எட்டும்போது எதிர்வுகூறலின் அடிப்படையில் முழுமையாகத் தங்கிநிற்காமல், யதார்த்த பூர்வமாகச் சிந்தித்து, தற்போதைய அரசியல் நிலையில் தமிழ்மக்களின் பலம், பலவீனம், அச்சுறுத்தல், வாய்ப்புக்களை மதிப்பீட்டு பொருத்தமான முடிவுகளை எடுத்துச் செயற்படுவதே அரசியல் ரீதியாக தமிழ்மக்களிற்குப் பயனளிக்கும்.</p>
<p>தற்போது சாதாரணமான அரசியல் செயற்பாடுகளை செய்துகொண்டு ‘தேசியம்’ என்ற நிலைப்பாட்டில் தெளிவாக தடம்புரளாமல் செல்கின்றோம், செயற்படுகின்றோம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அதுவே தமக்கான மக்கள் ஆதரவை பெற்றுத்தரும் அல்லது தக்கவைக்க போதுமானதாக இருக்கும் அல்லது வேறு தெரிவின்றி மக்களை எம்மைத்தான் தெரிவு செய்வார்கள் என்ற சிந்தனையில் கூட்டமைப்பு செயற்படக்கூடாது.</p>
<p>துன்புற்றிருக்கும் மக்களுடன் நெருங்கிச் செயற்பட்டு அவர்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்தல் வேண்டும். அப்போதுதான் அந்த மக்களுடனான புரிதல் வலுப்பெறும். அதனூடாக மக்களின் தேவைகள், செய்யவேண்டிய பணிகள் என்பது தொடர்பான எண்ணம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, இது மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய விடயமாக இருக்கும். இச்செயற்பாட்டினூடாக கூட்டமைப்பின் மக்கள் ஆதரவுத்தளத்தை அடிமட்டத்தில் வலுவாக்க வேண்டும்.</p>
<p> அதேவேளை புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழ்ச் தேசியத்தை சிதைக்க நினைத்துச் செயற்படும் சக்திகளை அப்புறப்படுத்துவதற்கான ஒரேவழி.<br />
தமிழர் தாயகப்பகுதியில் கூட்டமைப்பு பரந்தளவில் பணியாற்ற வேண்டுமாயின் புதிய தலைமுறை இளைஞர்கள் உள்வாங்கப்பட்டு கட்சியை விரைவாக சீரமைக்க வேண்டும். அடிமட்டத்திலிருந்து, அடுத்தகட்ட அரசியலை நகர்த்தக்கூடிய நிலைவரை அங்கத்துவம் தயார்ப்படுத்தப்பட வேண்டும். அஞ்சல் ஓட்டம் போல அடுத்த தலைமுறைகளை உருவாக்க தற்போதிருந்தே செயற்படத் தொடங்கினால் தான் தமிழ்தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட அரசியல் தலைமைகள் உருவாகும்.</p>
<p>அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை சரியாக மக்கள் மத்தியில் நிலைப்படுத்த இதைவிட சிறந்த தருணம் கிடைக்காது. இதைப்பயன்படுத்தாமல், இந்த இக்கட்டான கட்டத்தில் மக்களுடன் நிற்காமல் தேர்தல் வரும்போது மட்டும் வாக்கு பெறப்போனால் அது எந்தளவிற்கு பயனளிக்கும் என்பதை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான சம்பந்தர் அவர்கள் அறியாதவரல்ல.</p>
<p>ஆகையினால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன் இன்றுள்ள முக்கிய பணிகளாக பின்வருவனவற்றை அடையாளம் காணலாம்<br />
தமிழ்த்தேசியத்தை அடிப்படையாக கொண்ட பல்தரப்பட்ட அரசியல் செயற்பாடுகளையும் கருத்துக்களையும் கொண்டவர்களுடன் முன்னோக்கிய விவாதங்களும் வெளிப்படையான கலந்துரையாடல்களும் கருத்துப்பரிமாற்றங்களும் செய்யப்பட வேண்டும். இதனூடாக ஒரு ‘நிகழ்சி நிரல்’ உருவாக்கி அதனடிப்படையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.</p>
<p>இளம் தலைமுறைகளையும் செயலூக்கம் கொண்டவர்களையும் இனங்கண்டு, உள்வாங்கி கட்சியைச் சீரமைப்பதன் மூலம் அரசியல் பணிகளையும் மக்களின் புனர்வாழ்வு பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.</p>
<p>தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்தை சர்வதேச தளத்தில் வலுவாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக தாயகமும் புலம்பெயர் சமூகமும் முரண்பாடுகளற்ற பொருத்தமான வழிமுறைகளை கண்டறிந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.</p>
<p>இலங்கைத் தீவில் தமிழ்மக்களின் இருப்பையும் செழுமையையும் அரசியல் பண்பாட்டு தனித்துவத்தினையும் பாதுகாக்கக்கூடிய முறையில் ஒருங்கிணைந்த மூலோபாய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.</p>
<p>தற்போதைய அரசியல் சூழலில் செயற்றிட்டத்துடன் கூடிய வினைத்திறனான செயற்பாடே தமிழ்த் தேசியத்தை இலங்கைத்தீவில் நிலைநிறுத்துவதற்கும், தாயகச்சிதைவை தடுப்பதற்கும் உதவும். அதேவேளை தேசியத்தைப் பாதுகாக்க வெகுஐனப் போராட்டங்கள், சர்வதேச ரீதியான கருத்துருவாக்கங்கள், இலங்கைத்தீவிற்குள்ளும் புலம்பெயர் நாடுகளிலும் பரவலாக முன்னெடுக்கப்பட்டாலேயன்றி அரசியல் அடைவு சாத்தியமாகாது. கூட்டமைப்பினர் அறிக்கைகளையும் சிற்சில அரசியல் சந்திப்புக்களையும் முயற்சிகளையும் மட்டும் செய்துகொண்டு காலத்தைக்கழித்தால் தமிழ்த்தேசியம் இலங்கைத்தீவில் காணாமல் போகக்கூடிய வாய்ப்புள்ளது.</p>
<p>தமிழ்மக்களின் உரிமைகளை இலங்கைத்தீவில் உறுதிப்படுத்த பயனுள்ள பொருத்தமான வடிவத்தில் இனவிடுதலைக்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். தற்போதைய நிலையில் கூட்டமைப்பினர் தம்முன்னுள்ள பணிகளை தலை மேற்கொண்டு செயற்படுவார்களா? என்பதை தமிழ்த் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்ட, கூட்டமைப்பிற்கு வாக்களித்த தமிழ்மக்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.</p>
<p>அபிஷேகா <a href="mailto:abishaka@gmail.com">abishaka@gmail.com</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&amp;p=432</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கருத்தியல் போரில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை</title>
		<link>http://www.thanall.com/?p=426</link>
		<comments>http://www.thanall.com/?p=426#comments</comments>
		<pubDate>Tue, 17 Aug 2010 22:41:30 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=426</guid>
		<description><![CDATA[யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டு ஆயுதப் போராட்டத்தை நசுக்கி விட்டதாகக் கடந்த ஆண்டு மே 18 ஆம் நாளன்று சிங்கள அரசு பிரகடனம் செய்து கொண்ட பொழுதும், பதினைந்து மாதங்கள் எட்டியுள்ள நிலையிலும் உலகத் தமிழினத்தின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவைத் துடைத்தெறிய முடியாத கையாலாகாத நிலையிலேயே தொடர்ந்தும் சிங்களம் உள்ளது. 
வன்னிப் போர் முடிவுக்கு வந்த மறுகணமே போர்க்களத்தில் இருந்து தனது கவனத்தை புகலிட தேசங்களை நோக்கி சிங்களம் குவிமையப்படுத்திக் கொண்டதோடு, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/Maaveerar.jpg"><img class="alignleft size-full wp-image-427" title="Maaveerar" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/Maaveerar.jpg" alt="" width="105" height="121" /></a>யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டு ஆயுதப் போராட்டத்தை நசுக்கி விட்டதாகக் கடந்த ஆண்டு மே 18 ஆம் நாளன்று சிங்கள அரசு பிரகடனம் செய்து கொண்ட பொழுதும், பதினைந்து மாதங்கள் எட்டியுள்ள நிலையிலும் உலகத் தமிழினத்தின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவைத் துடைத்தெறிய முடியாத கையாலாகாத நிலையிலேயே தொடர்ந்தும் சிங்களம் உள்ளது. <span id="more-426"></span></p>
<p>வன்னிப் போர் முடிவுக்கு வந்த மறுகணமே போர்க்களத்தில் இருந்து தனது கவனத்தை புகலிட தேசங்களை நோக்கி சிங்களம் குவிமையப்படுத்திக் கொண்டதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை உடைத்தெறியும் போர்வையில், புகலிட தமிழீழத் தேசிய அமைப்புக்களையும், தமிழகத்தின் தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் குறிவைத்து தனது காய்களையும் நகர்த்தத் தொடங்கியிருந்தது.</p>
<p>இதன் முதன்மை மூலோபாயமாக தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிப்பதையும், அதனூடாக ஆயுதப் போராட்டத்தின் மீதான உலகத் தமிழினத்தின் நம்பிக்கையை சிதறடிப்பதையும், இவற்றின் பெறுபேறாக உலகத் தமிழினத்தின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவை துடைத்தெறிவதையும் இலக்காகக் கொண்டு, தனது கருத்தியல் போரை சிங்களம் தொடங்கியிருந்தது. சிங்களத்தின் இந்த மூலோபாயத்தை செயற்படுத்தும் வகையிலான கருத்துக்களையே மே 18 இற்குப் பின்னர் கே.பி அவர்களும் வெளியிட்டிருந்தார். அவ்வாறான கருத்துக்களையே இப்பொழுதும் கே.பி அவர்கள் வெளியிட்டுவருகின்றார். ஆனாலும் கே.பியூடாகவும், தனது ஊடக வலையமைப்புக்கள் வாயிலாகவும் உலகத் தமிழர்களைக் குறிவைத்து மகிந்தர் தொடங்கிய கருத்தியல்போர் என்பது, 1997 ஆம் ஆண்டில் சந்திரிகா அம்மையார் தொடங்கிய `ஜெயசிக்குறுய்` நடவடிக்கைக்கு ஒப்பான நிலையையே தற்பொழுது எட்டியுள்ளது.</p>
<p>மெது மெதுவாக, அரக்கி அரக்கி, பதினைந்து மாதங்களில் மாங்குளத்துடன் சிக்குண்டு போன  `ஜெயசிக்குறுய்’ நடவடிக்கை போன்று, உலகத் தமிழர்களிடையே சிறு சலசலப்பை ஏற்படுத்திய பின்னர், முடக்க நிலையை சிங்களத்தின் கருத்தியல் போர் எட்டியுள்ளது. இதில் வரலாற்றின்  நகைமுரண் யாதெனில், `ஜெயசிக்குறுய்’ நடவடிக்கையின் பொழுது மாங்குளத்தை சிங்களப் படைகள் நெருங்கிய வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் கிளிநொச்சி நகர் மீட்டெடுக்கப்பட்டு ‘ஜெயசிக்குறுய்’ நடவடிக்கையின் நடவடிக்கையின் இலக்கு பின்தள்ளப்பட்டு, சந்திரிகா அம்மையாரின் கனவு வெறும் கனவாகிப் போனது. இந்நிகழ்வின் மறுபதிவாக, கடந்த யூன் மாதம் புகலிட தேசங்களில் இருந்து கே.பியின் அடிவருடிகளை கொழும்பிற்கு அழைத்து, அதனூடாக உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு மகிந்தர் எடுத்த முயற்சியும், கலைந்து போன வெறும் கனவாகவே மாறிப்போயுள்ளது.   கே.பி ஆயினும் சரி, அல்லது அவரது அடிவருடிகளாயினும் சரி, அன்றி மிதவாதிகள் என்று கூறிக்கொண்டு அடிக்கடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை வெளியிடுபவர்களாயினும் சரி, எவ்வளவு தூரத்திற்கு தலைகீழாக நின்றாலும், உலகத் தமிழர்களின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவை சிதறடிப்பது என்பது இவர்களுக்கு முயற்கொம்பாகவே உள்ளது.</p>
<p>இந்த வகையில், சிங்களத்தின் இந்த சதி முயற்சியை தடுத்து நிறுத்துவதில் முதன்மையான பாத்திரத்தை வகித்த தமிழகத் தலைவர்களான பழ.நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்களுக்கு என்றென்றும் ஈழத்தமிழர்கள் நன்றிக்குரியவர்கள். இன்று உலகத் தமிழர்களிடையே &#8211; குறிப்பாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே &#8211; பல்வேறு குழப்பங்கள் நிலவினாலும் கூட,  இவையனைத்தையும் கடந்தும் தமிழீழக் கருத்தியலை உயிர்வாழ வைக்கும் சக்தியாக மாவீரர்களின் ஆன்மீக  வல்லமையே திகழ்கின்றது. இதுவே இன்று சிங்களத்திற்கு பெரும் சவாலாகவும் விளங்குகின்றது. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளடங்கலான மாவீரர்களை இழிவுபடுத்தி செவ்வி வழங்கிய கே.பியை கடுமையாக விமர்சித்து, கே.பி குழுவிற்கு ஆதரவான தமிழ்த் தொலைக்காட்சியில் இவ்வாரம் மக்கள் வெளியிட்ட கருத்துக்கள் இதற்கு தெளிவான சான்றைப் பகர்கின்றன.</p>
<p>இதேநேரத்தில், உலகத் தமிழர்களிடையே அணையாத தீயாக உயிர்வாழும் தமிழீழக் கருத்தியலால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை, சிங்கள &#8211; இந்திய அரசுகளும் நன்கு புரிந்துகொண்டுள்ளன. இப்புரிதலைப் பிரதிபலிக்கும் வகையில், சிங்கள &#8211; இந்திய அரசுகளின் மூலோபாய ஆலோசனைக் கல்விமான்களாக விளங்கும் பேராசிரியர் ரொகான் குணரட்ண, கலாநிதி தயான் ஜெயத்திலக, கேணல் ஹரிகரன், பி.இராமன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் ஆய்வுக்கட்டுரைகள் திகழ்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், கடந்த ஒரு வார காலப்பகுதியில் இந்த நான்கு `நாயன்மார்களின்` ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்திருப்பதோடு, உலகத் தமிழினத்தின் ஆழ்மனத்தின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கருத்தியல் தோற்கடிக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியே தமது ஆய்வுகளையும் இவர்கள் வடிவமைத்துள்ளனர். </p>
<p>இதுபற்றிக் கருத்துக்கூறும் ரொகான் குணரட்ண, தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு தற்பொழுது சிறீலங்கா அரசாங்கத்திற்கு எரிச்சலூட்டும் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபடுவதாகவும், எனினும் அதன் செயற்பாடுகள் மேலும் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் பட்சத்தில், இன்னும் ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகளுக்குள் அது அச்சுறுத்தலாக மாறிவிடக்கூடும் என்றும் எச்சரிக்கின்றார்.இவ்வாறான சூழல் தோன்றுவதை தடுத்து நிறுத்துவதற்கு, கே.பி போன்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சிறீலங்கா அரசாங்கம் பயன்படுத்துவதோடு, புலம்பெயர்ந்தோருக்கான கட்டமைப்பு ஒன்றை நிறுவி அதனூடாக தமிழீழக் கருத்தியலை புலம்பெயர்வாழ் தமிழர்களின் மனதில் இருந்து அகற்ற வேண்டும் என்றும், ரொகான் குணரட்ண ஆலோசனைவழங்குகின்றார். </p>
<p>இதேதொனியில் கருத்து வெளியிட்டிருக்கும் கேணல் ஹரிகரன், புலம்பெயர்வாழ் தமிழர்களை இலக்கு வைத்து ‘சாம, பேத, தான, தண்ட’ மூலோபாயங்களை சிறீலங்கா அரசாங்கம் கையாள்கின்ற பொழுதும், அவர்களின் அடிமனதில் இருந்து தமிழீழக் கருத்தியல் அழிக்கப்படும் வரை, தனது இலக்கை சிறீலங்கா அரசாங்கத்தால் ஈட்டிவிட முடியாது என்றும் குறிப்பிடுகின்றார்.</p>
<p>கே.பியைப் பயன்படுத்தி புலம்பெயர்வாழ் தமிழர்களிடையே சிதைவுகளை சிறீலங்கா அரசாங்கம் ஏற்படுத்தினாலும் கூட, தமிழீழக் கருத்தியலை சிதறடிப்பது கடினம் என்றும், அரசியல் தீர்வின் ஊடாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் கேணல் ஹரிகரன் வலியுறுத்துகின்றார்.<br />
இதேபாணியில் கருத்து வெளியிட்டிருக்கும் பி.இராமன், புலம்பெயர் தேசங்களில் மட்டுமன்றி தமிழகத்திலும் தமிழீழக் கருத்தியல் உயிர்வாழ்வதாகவும், இது எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கின்றார். அண்மையில் இந்திய திரையுலக நட்சத்திரங்களின் கொழும்புப் பயணத்தை தமிழக மக்கள் முடக்கியமை, தமிழகத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழலையே உணர்த்துவதாகவும், தமிழீழக் கருத்தியல் தொடர்ந்தும் உயிர்வாழும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உயிரூட்டம் பெறுவதை தடுத்து நிறுத்துவது கடினமானது என்றும், பி.இராமன் சுட்டிக் காட்டுகின்றார். </p>
<p>இவர்கள் அனைவரில் இருந்து சற்று வித்தியாசமாகக் கருத்து வெளியிட்டிருக்கும் கலாநிதி தயான் ஜெயத்திலக, புலம்பெயர் தேசங்களில் உயிர்வாழும் தமிழீழக் கருத்தியலை எதிர்கொள்ள முடியாது சிறீலங்கா அரசு திண்டாடுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றார். ‘சிறீலங்கா அரசை ஆட்டிப்படை வார இதழில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் தயான் ஜெயத்திலக, அனைத்துலக சமூகத்தை இலக்கு வைத்து, 1970 களில் இலண்டனில் இருந்து தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தொடக்கி வைத்த ‘பன்னாட்டு அரசியல்-கருத்தியல் இயக்கம்’ என்பது, தற்பொழுது ‘தமிழீழக் கருத்தியலை’ உலக அரங்கில் நகர்த்திச் செல்வதாகவும் குறிப்பிடுகின்றார்.</p>
<p>தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணங்களுக்கு ‘மிகவும் நுட்பமான மேற்குலக மயப்படுத்தப்பட்ட மார்க்சிய-யதார்த்தவாத வடிவம்’ கொடுத்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், தாதன்னைப் போன்று அனைவரையும் உருவாக்கி, சிந்திக்க வைத்தார்’ என்றும், இலண்டனில் இருந்து ‘பாலா அண்ணா’ தொடக்கி வைத்த ‘உலக மயப்படுத்தப்பட்ட தனியரசு நோக்கிய ஆதரவியல், பரப்புரை, பொது இராசதந்திர நடவடிக்கைகள்’, தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கலாநிதி தயான் ஜெயத்திலக சுட்டிக் காட்டுகின்றார். </p>
<p>செப்ரம்பர் 11இற்குப் பின்னரான உலக ஒழுங்கு பற்றிய மாயைக்குள் இப்பொழுதும் சிறீலங்கா அரசு மூழ்கிக் கிடக்கின்ற பொழுதும், கொசவோவை தனியரசாக அங்கீகரித்தன் மூலம், ஜோர்ஜ் புக்ஷ் அவர்களின் காலத்தில் இருந்து பின்னோக்கி நகர்ந்து, மனிதவுரிமைகள், மனிதநேயத் தலையீடு போன்றவற்றின் அடிப்படையில் நாடுகளை பிளவுபடுத்தித் தனியரசுகளை அமைக்கும் நிலைக்குள் தற்போதைய உலக ஒழுங்கு நகர்ந்திருப்பதாகவும், கலாநிதி தயான் ஜெயத்திலக சுட்டிக் காட்டுகின்றார்.</p>
<p>உலக நாடுகளை அணிதிரட்டி, மிகவும் தீர்க்கமான இராசதந்திர நடவடிக்கையூடாக கடந்த ஆண்டு யுத்தத்தை சிறீலங்கா அரசு வெற்றிகொண்ட பொழுதும், தெருச்சண்டியர்’ பாணியில் சிறீலங்கா அரசு முன்னெடுக்கும் பழமைவாத மரபுவழி இராசதந்திரம், ‘பாலசிங்கத்தின் ஆவியை’ எதிர்கொள்ள முடியாது திண்டாடுவதாகவும், கலாநிதி தயான் ஜெயத்திலக குறிப்பிடுகின்றார். அத்துடன், கே.பியை பயன்படுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்புக்களை உடைப்பதற்கு சிறீலங்கா அரசு எடுக்கும் முயற்சிகள் காத்திரமான பயனை அளிக்கப் போவதில்லை என்றும், கலாநிதி தயான் ஜெயத்திலக சுட்டிக்காட்டுகின்றார். ஐக்கிய நாடுகளின் ஜெனீவா செயலகத்திற்கான சிறீலங்கா அரசின் நிரந்தர தூதுவராகக் கடமையாற்றிய கலாநிதி தயான் ஜெயத்திலக, வன்னிப் போரின் இறுதிக் கணங்கில் புகலிட தேசங்களில் இருந்து தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்பட்ட பரப்புரை நடவடிக்கைகளை முறியடிப்பதில் முன்னின்று செயலாற்றியவர். </p>
<p>ஒரு வகையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் மனிதநேய முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்த முதன்மை நபர்களில் கலாநிதி தயான் ஜெயத்திலகவும் ஒருவர். மே 18 வரை அனைத்துலக அரங்கில் சிங்களத்தின் முதுகெலும்பாக விளங்கிய கலாநிதி தயான் ஜெயத்திலக, யுத்தம் முடிவடைந்ததும் மகிந்த சகோதரர்களால் ஓரங்கட்டப்பட்டு, மீண்டும் தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் முடக்கப்பட்டிருப்பது வேறுகதை. ஆரம்பகாலங்களில் தன்னை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட கலாநிதி தயான் ஜெயத்திலக, பின்னர் தன்னை முழுமையான சிங்கள இனவாதியாக அடையாளப்படுத்தியமையும் வேறு விடயம். ஆனால் கலாநிதி தயான் ஜெயத்திலகவும், சிங்கள-இந்தியக் கூட்டின் ஏனைய `நாயன்மார்களும்` கூறும் செய்தி ஒன்றுதான். அதாவது, புகலிட தேசங்களில் இன்று உயிர்வாழும் தமிழீழக் கருத்தியல், எதிர்காலத்தில் சிங்கள அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதே அது. இதனை நாம் மறு வாசிப்பிற்கு உட்படுத்தினால், தமிழீழக் கருத்தியலில் உலகத் தமிழர்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில், மாறிவரும் உலக ஒழுங்கிற்கு அமைய எதிர்காலத்தில் தமிழீழத் தனியரசு அமைவதை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதே கலாநிதி தயான் ஜெயத்திலகவின் செய்தியாக அமைகின்றது என்று, நாம் கற்பிதம் செய்துகொள்ள முடியும். </p>
<p>இதிலிருந்து ஒன்றை மட்டும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் இயங்குசக்தியாக விளங்குபவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அந்த மாபெரும் இயங்குசக்திக்கு ஆன்மீக வல்லமை அளிப்பவர்கள் மாவீரர்கள். முதல் மாவீரன் லெப்.சங்கர் தொடக்கம், முதற் கரும்புலி கப்டன் மில்லர், லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப்.மாலதி, முதுபெரும் தளபதி கேணல் கிட்டு, தேசத்தின் குரல் பாலா அண்ணை, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் பால்ராஜ் என நீண்டு விரிந்து செல்லும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை என்பது ஆழ அகலங்களுக்கு அப்பாற்பட்டது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இயக்கும் சூரியத்தேவன் என்ற மாபெரும் இயங்குசக்தியின் நதிமூலமாக விளங்கும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமையே இன்று தமிழீழக் கருத்தியலை உயிர்வாழ வைக்கின்றது.</p>
<p>இதனை எந்தவொரு சக்தியாலும் அழித்துவிடமுடியாது. இது மட்டும் உறுதி. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், ‘சத்தியத்தின் சாட்சியாக நின்று எமது மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்த சத்தியத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி.’ என்பதை மட்டும் இங்கு நினைவூட்டிக் கொள்ள முடியும். </p>
<p>ஈழத்தின் குரல்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&amp;p=426</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள்- நிராஜ் டேவிட்</title>
		<link>http://www.thanall.com/?p=416</link>
		<comments>http://www.thanall.com/?p=416#comments</comments>
		<pubDate>Sun, 15 Aug 2010 10:52:56 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=416</guid>
		<description><![CDATA[ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள், படுகொலைகளின் வாரம் என்று கூட அதனைக் குறிப்பிடமுடியும். 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரையான ஐந்து நாட்களில், ஸ்ரீலங்காப் படையினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும், மட்டக்களப்பு மண்ணில் ஆடியிருந்த கோரதாண்டவத்தை மட்டக்களப்பு பிரதேசவாழ் மக்களால் என்றுமே மறந்துவிட முடியாது. தமிழின உயிர்கொலை நாள் என்று மட்டக்களப்பு வாழ் மக்களால் வேதனையுடனும், அச்சத்துடனும் நீண்டகாலம் நினைவுகூறப்பட்ட இந்த வாரத்தில் மட்டும் சுமார் 700இற்கும் அதிகமான [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/Killing-logo.bmp"><img class="alignleft size-full wp-image-417" title="Killing logo" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/Killing-logo.bmp" alt="" /></a>ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள், படுகொலைகளின் வாரம் என்று கூட அதனைக் குறிப்பிடமுடியும். 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரையான ஐந்து நாட்களில், ஸ்ரீலங்காப் படையினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும், மட்டக்களப்பு மண்ணில் ஆடியிருந்த கோரதாண்டவத்தை மட்டக்களப்பு பிரதேசவாழ் மக்களால் என்றுமே மறந்துவிட முடியாது.<span id="more-416"></span> தமிழின உயிர்கொலை நாள் என்று மட்டக்களப்பு வாழ் மக்களால் வேதனையுடனும், அச்சத்துடனும் நீண்டகாலம் நினைவுகூறப்பட்ட இந்த வாரத்தில் மட்டும் சுமார் 700இற்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்கள், சிறுவர்கள், குடும்பஸ்தர்கள் என்ற பேதம் எதுவும் இல்லாமல் ஸ்ரீலங்கா இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் படுகொலை செய்யப்பட்ட இந்தத் தமிழ் உறவுகள் பற்றிய நினைவுகள், ஒவ்வொரு செம்டெம்பர் 5ம் திகதியும் வடக்கு கிழக்கு முழுவதும் தமிழ் மக்களால் நினைவு கூறப்பட்டு வந்தது.</p>
<p style="text-align: justify;">1990ம் ஆண்டு ஈழப்போர் உக்கிரம் அடைந்ததைத் தொடர்ந்து, மட்டக்களப்புத் தமிழ் மக்கள் மீது அழித்தொழிப்பு யுத்தம் ஒன்றை ஸ்ரீலங்காப் படையினர் கட்டவிழ்த்துவிட்டிருந்தார்கள். அக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடிக்கி ஒடுக்குவதற்கு, படுகொலைகளை ஒரு போரியல் யுத்தியாகவே ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொண்டு வந்தது. கைகளில் கிடைத்தவர்களையெல்லாம் கொலை செய்து டயர்களில் போட்டு எரித்தார்கள். இளைஞன், வயது முதிந்தவர்கள், சிறுவர்கள் என்று எந்தவொரு விந்தியாசமும் சிங்களப் படைகளின் கண்களுக்குத் தெரியவில்லை.</p>
<p style="text-align: justify;">தமிழன் என்ற ஒரே அடையாளம்தான் ஒவ்வாரு சிங்களச் சிப்பாயின் கண்களுக்கும் தெரிந்தது. எந்த ஒரு ஜீவனையும் கொலைசெய்வதற்கு அந்த ஒரு காரணம் அவர்களுக்குப் போதுமானதாகவும் இருந்தது. வீதிகளிலெல்லாம் பிணவாடை. தமிழன் வாழ்ந்த ஒவ்வொரு வீட்டினது சுவர்களின் மறைவுகளிலும் வெளியே சொல்லமுடியாத எத்தனையோ அவலங்கள். கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, கைது, வெள்ளைவான் கடத்தல்கள் என்று தொடர்ந்த சிங்கள இராணுவத்தினுடைய அடாவடித்தனங்களுக்குப் பயந்து பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேறி காடுகளுக்குள்ளும், கோயில்களிலும், பாடசாலைகளிலும் தஞ்சமடைந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் சுமார் 50000 தமிழ் மக்கள் தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்துடன் தஞ்சமடைந்திருந்தார்கள். ஆனாலும், மரணம் என்ற அரக்கன் ஸ்ரீலங்காப் படையினரின் சீருடை தரித்து வந்து அவர்களை பல்கலைக்கழகத்திலும் துரத்த ஆரம்பித்திருந்தான். அன்று வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பஸ்தர்களுள் சடாச்சரம் என்ற இளைப்பாறிய ஆசிரியரும் ஒருவர். அன்றைய நாளில் அங்கு நடைபெற்ற கொடூரத்தை அவர் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.</p>
<p style="text-align: justify;">1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி அதிகாலை கிழக்குப் பல்கலைக்கழகம் அல்லோல்ல கல்லோல்லப்பட்டது. அதிகாலை முதல் கேட்க ஆரம்பித்திருந்த ஸ்ரீலங்கா இராணுவ வாகனங்களின் இரைச்சல் அங்கிருந்த மக்களுக்கு எச்சரிக்கை ஒலியாகவே தென்பட்டது. ஏதோ நடக்கப்போகின்றது என்று அங்கிருந்த ஒவ்வொருவரது உள்முனமும் எச்சரித்துக்கொண்டே இருந்தது. அங்கு தங்கியிருந்த ஒரு சில துணிச்சலான இளைஞர்கள் மதிலால் குதித்து எங்கோ சென்று மறைந்துகொண்டார்கள். என்னுடன் தங்கியிருந்த எனது நண்பன் சதாசிவம் தனது மகனைப் பார்த்து நீ எங்கும் போகவேண்டாம்.</p>
<p style="text-align: justify;">என்ன நடந்தாலும் எம் அனைவருக்கும் ஒன்றாகவே நடக்கட்டும். இங்கேயே, எனது அருகிலேயே இருந்துவிடு என்று கூறி, தனது இளவயது மகனை தன் அருகில் அணைத்துக் கொண்டார். படையினரின் பார்வைக்கு டீசன்ட் ஆகத் தெரியவேண்டும் என்று கூறி, அந்த இளைஞனுக்கு மெல்லிய நிறத்திலான ஆடையை அணிவித்து, முகத்திற்கு பவுடர் பூசி, அந்த தனது ஒரே சொத்தாக தனது புத்திரனை பாதுகாக்கும் அனைத்து எத்தனங்களையும் மேற்கொண்டார். அன்று அங்கு வந்த இராணுவத்தின் கோரப் பசிக்கு தானும் இரையாகவேண்டி இருக்கும் என்பதை உணந்திராத அந்த இளைஞனும் தனது பெற்றோரின் இழப்புகள் அனைத்திற்கும் உட்பட்டு அவர்களின் சேட்டைகளுக்குள் அடைக்கலமாகி நின்றான்.</p>
<p style="text-align: justify;">இராணுவ வாகனங்களில் வந்து, பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிவழைத்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பல்கலைக்கழக வளாகத்திற்குள் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் அனைவரையும் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திற்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்தார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பாராமல் அனைவரையும் பல மணி நேரம் மைதானத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்தார்கள். அதன் பின்னர் அந்த மைதானத்தில் குழுமியிருந்தவர்கள் மத்தியில் இருந்து படித்த, வாட்டசாட்டமான தோற்றத்தைக் கொண்ட 158 தமிழ் இளைஞர்களும், குடும்பஸ்தர்களும் தெரிவுசெய்யப்பட்டு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ.போ.ச. பேரூந்துகளில் ஏற்றப்பட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">இராணுவத்தினருடன் அங்கு வந்திருந்த ஏழு முஸ்லிம் ஊர்காவல் படையினரும், கறுப்பு முகமூடி அணிந்து இராணுவச் சீருடையில் வந்திருந்த மற்றும் ஐந்து பேருமே கிழக்குப் பல்கலைக் கழகத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் இருந்து தமிழ் இளைஞர்களை தெரிவு செய்தார்கள். இராணுவத்தினர் திரும்பிச் செல்லும் போது, கைதுசெய்திருந்த இளைஞர்களையும் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். பல்கலைக்கழகமே அல்லோல்லகல்லோல்லப்பட்டது. எங்கும் ஒப்பாரி ஒலிகளும், ஆறுதல் வார்த்தைகளும், பிராத்தனைகளுமாக கேட்டபடி இருந்தது. இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மறுநாளும் திரும்பிவராததைத் தொடர்ந்து, எமக்கிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் சிதறிவிட்டது.</p>
<p style="text-align: justify;">நான்கு நாட்கள் கடந்துவிட்ட நிலையில்தான், நாவலடிச் சந்தியில் சிலரது உடல்களை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் போட்டு எரித்ததாக வந்திகள் வந்தன. இதேபோன்று 23.09.1990 இல் கிழக்குப் பல்கலைக்கழகம் மறுபடியும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் சுற்றிவழைக்கப்பட்டு அங்கு தங்கியிருந்த மேலும் 16 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களும் பின்னர் கொலை செய்யப்பட்டதாகவே கூறப்படுகின்றது. அன்றைய அந்தச் சம்பவத்தை நினைத்தால் எனக்கு இப்பொழுதும் மேல் சிலிர்க்கின்றது. அன்றும் எனது மேல் இப்படித்தான் சிலிர்த்தது. ஆனால் ஒரு வித்தியாசம் அன்று எனது உடல் சிலிர்த்தது பயத்தினால்&#8221; ஆனால் இன்று எனது உடல் சிலிர்ப்பது கோபத்தினால்.</p>
<p style="text-align: justify;">எமது குழந்தைகளின் உயிர்களை எமது கண்முன்னாலேயே பறித்தச் சென்ற அந்த வல்லூறுகளை ஒரு கை பார்த்துவிடுவதற்காக தெம்பு தற்பொழுது எனக்கில்லையே என்கின்ற கோபம்தான் இதற்குக் காரணம். இவ்வாறு அந்த இளைப்பாறிய ஆசிரியர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். கிழக்குப் பல்கலைக்கழக சம்பவம் நடைபெற்று நான்கு நாட்கள் கடந்த நிலையில், மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள சத்துருக்கொண்டான் ~போய்ஸ் டவுன் (Boy&#8217;s Town) என்றும் இடத்திலும் இதேபோன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றது. 09.09.1990 அன்று மாலை சத்துருக்கொண்டான் Boy&#8217;s Town படை முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர், சத்துருக்கொண்டான் கிராமத்தையும், அருகிலுள்ள பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் பொன்ற கிராமங்களையும், சுற்றிவழைத்து அங்கிருந்து 184 தமிழ் பொதுமக்களை விசாரணைக்கென்று அழைத்துச் சென்றனர்.</p>
<p style="text-align: justify;">(இதில் 84 பெண்கள், 50 குழந்தைகள், இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நான்கு மாதக் குழந்தை ஒன்றும், சில முதியவர்களும் அடங்கியிருந்தனர்) இவர்கள் அனைவருமே Boy&#8217;s Town இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது உடல்கள் பின்னர் எரியூட்டப்பட்டன. இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார். இந்தக் கொலைகள் பற்றி விசாரிக்கவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு முன் அந்த நபர் சாட்சியம் அளிக்கையில், முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்களின் கண்கள் மூடிக் கட்டப்பட்டன. அனைவரினதும் கைகளும் பின்புறமாகக் கட்டப்பட்டன. என்னை முந்திரிகை மரமொன்றின் கீழே படுக்குமாறு கூறி, கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கினார்கள்.</p>
<p style="text-align: justify;">நான் நினைவிழந்து விட்டேன் என்று தெரிவித்திருந்தார். இந்த முகாமிற்கு அருகில் வசித்தவர்கள் தெரிவித்த தகவல்களின்படி பொதுமக்கள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அழுகுரல்களும், கதறல்களும் கேட்டன. பின்னர் புகை மண்டலம் தெரிந்ததுடன், பிணவாடையும் வீசியது. இவ்வாறு ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படாத, தமது வீடுகளில் மறைந்திருந்து தப்பிய கிராமவாசிகள் தெரிவித்தார்கள். இந்தச் சம்பவத்திலும், முஸ்லிம் ஊர்காவல் படையினர் சம்பந்தப்பட்டிருந்தனர் என்று அப்பிரதேச வாழ் மக்கள் தெரிவிக்கின்றார்கள். இதுபோன்று 90களில் மட்டக்களப்பில் இடம்பெற்ற பல படுகொலைச் சம்பவங்களின் நினைவாக, செப்டெம்பர் 5ம் திகதியை 2003ம் ஆண்டு தமிழின உயிர்கொலை நாளாகப் பிரகடனப்படுத்தியிருந்த மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெருமன்றம், அன்றைய தினத்தை ஒரு தேசிய துக்க தினமாகவும் பிரகடனப்படுத்தியிருந்தது.</p>
<p style="text-align: justify;">சமாதான காலத்தில் இந்த தமிழின உயிர் கொலை தினம் கிரமமாக நினைவுகூறப்பட்டு வந்தது. யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து கிழக்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், தமிழீழ உயிர்கொலை நாளை மறக்கடிக்கச் செய்துவிட்டுள்ளது. தமிழ் மண்ணில் இடம்பெற்ற பல படுகொலைச் சம்பவங்கள் வரலாற்றில் இருந்து மட்டுமல்லாது, மக்களது மனங்களில் இருந்தும் மறைந்துவிடாமல் இருப்பதுதான் காலத்தின் மிகப் பெரிய தேவையாக இன்று இருக்கின்றது. தமிழின உயிர்கொலை நாளை நினைவு கூர்ந்த சமாதான காலத்தில் (2003)மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெருமன்ற முக்கியஸ்தர் ஒருவர் கூறிய கருத்தை இந்த இடத்தில் மீட்டுப்பாரப்பது அவசியம் என்று நினைக்கின்றேன்.</p>
<p style="text-align: justify;">தொலைக்காட்சி நாடகங்களுக்குள்ளும், கிறிக்கெட் போட்டிகளுக்குள்ளும், தமிழ் மக்கள் தம்மை மறந்து உள்வாங்கப்பட்டுவிடும் அபாயம் உள்ள இந்த நேரத்தில் அவர்கள் முன்னைய காலத்தில் எதிர்கொண்ட இன்னல்கiளுயும் மீட்டுப் பார்ப்பது அவசியம். இதுபோன்ற துன்பச் சம்பவங்களை மீட்டுப் பார்ப்பதானது எமது பழிவாங்கும் உணர்சிகளை அதிகரிப்பதை நோக்காகக்கொண்டு அல்ல. எதிர்காலத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ளும் உணர்வுகளை எமக்கு நாமே உருவாக்கிக்கொள்வதற்காகவே எமக்கேற்பட்ட துன்பங்களை நாம் நினைத்துப் பார்க்கின்றோம் என்று தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் இந்த தமிழன உயிர்கொலை நாளை ஈழ தேசம் முழுவதும் மட்டுமல்ல, ஈழத்தமிழர் வாழும் அனைத்து தேசங்களும் நினைவுகூறும் என்பது நிச்சயம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு தெரிவித்த நபர் இப்பொழுது இலங்கைத் தீவில் தீவிர அரசியல் செய்துகொண்டு இருக்கின்றார். ஆனால் அவர் இந்த தமிழின உயிர்கொலை நாளை முற்றாகவே மறந்துவிட்டது போன்றே தோன்றுகின்றது. எமது நாடு இன்று இருக்கின்ற நெருக்கடியில் அங்குள்ள மக்களால் இந்த நாளை எந்த அளவுக்கு நினைவுகூற முடியும் என்று தெரியவில்லை. புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற நாமாவது இந்த தினத்தை மறந்துவிடாமல் இருப்பது அவசியம். புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற ஈழத் தமிழ் அமைப்புக்களில் சிலவாவது இந்த தமிழின உயிர்க்கொலை நாளை நினைவுகூறுவது வரவேற்கத்தக்கது.</p>
<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/Killings.bmp"><img class="alignnone size-full wp-image-418" title="Killings" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/Killings.bmp" alt="" /></a></p>
<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/Killing2.bmp"><img class="alignnone size-full wp-image-419" title="Killing2" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/Killing2.bmp" alt="" /></a></p>
<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/Killings3.bmp"><img class="alignnone size-full wp-image-420" title="Killings3" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/08/Killings3.bmp" alt="" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&amp;p=416</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கையின் பூர்வீக குடிமக்கள் தமிழர்களே! சிங்களர்களல்லர்!!</title>
		<link>http://www.thanall.com/?p=411</link>
		<comments>http://www.thanall.com/?p=411#comments</comments>
		<pubDate>Sat, 14 Aug 2010 20:27:46 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=411</guid>
		<description><![CDATA[
இலங்கை - தமிழர்களுக்கே சொந்தம் - மறுக்க முடியாத சரித்திர உண்மைகள்!
சிங்களர்கள் வங்காளத்திலிருந்து தமிழர்களுக்குப் பின்னர் குடியேறியவர்களேயென்று இலங்கை சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். இலங்கை சேதத்தின் புராதனக் குடிகள் தென்னிந்தியத் தமிழர்களேயன்றி சிங்களர்களல்ல. இந்த உண்மையை நிரூபணம் செய்வதற்கு சரித்திர ஆதாரங்கள் மலிந்து கிடக்கின்றன.  டாக்டர் ஜி.ஸி.மெண்டிஸ் என்பவர் தாம் வரைந்துள்ள இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும் என்ற நூலில் இலங்கையின் பூர்வீக மக்கள் வேடர்களே யென்றும், கி.மு. 543 ஆம் ஆண்டில் வந்த சிங்களர்கள் இலங்கைக்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-family: Tahoma;"><span style="font-size: x-small;"><span style="font-family: times new roman, new york, times, serif;"><strong><img class="alignleft" src="http://t2.gstatic.com/images?q=tbn:vvkWBHmvleJFsM:http://www.sangam.org/articles/view2/PandaraVanniyan.gif" alt="" width="100" height="140" /></strong></span></span></span></p>
<p><span style="font-family: Tahoma;"><strong><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">இலங்கை </span></span></strong></span><strong><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">- </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">தமிழர்களுக்கே சொந்தம் </span></span></span><strong><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">- </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">மறுக்க முடியாத சரித்திர உண்மைகள்</span></span></span><strong><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">!</span></span></strong></strong></strong></p>
<p><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">சிங்களர்கள் வங்காளத்திலிருந்து தமிழர்களுக்குப் பின்னர் குடியேறியவர்களேயென்று இலங்கை சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இலங்கை சேதத்தின் புராதனக் குடிகள் தென்னிந்தியத் தமிழர்களேயன்றி சிங்களர்களல்ல</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இந்த உண்மையை நிரூபணம் செய்வதற்கு சரித்திர ஆதாரங்கள் மலிந்து கிடக்கின்றன</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.<span id="more-411"></span></span></span>  <span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">டாக்டர் ஜி</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">ஸி</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மெண்டிஸ் என்பவர் தாம் வரைந்துள்ள இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும் என்ற நூலில் இலங்கையின் பூர்வீக மக்கள் வேடர்களே யென்றும்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">கி</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. 543 </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">ஆம் ஆண்டில் வந்த சிங்களர்கள் இலங்கைக்கு அந்நியர்களாகவேயிருந்தார்களென்றும் திட்டமாகச் சொல்லியிருக்கிறார்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">அதே புத்தகத்தின் </span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">14 </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">ஆம் பக்கத்தில் சிங்களர்களின் வருகைக்குச் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே ஆரியத் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இதுபோல் திரு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">கீஜர் என்னும் பிரபல சரித்திர ஆராய்ச்சியாளர் தம்முடைய மகாவம்சத்தில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span></p>
<p><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இலங்கையின் பூர்வீகக் குடிகள் நாகர்களும் யக்ஷர்களுமே</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">சிங்களர்களின் வருகைக்கு முன்னால் இவ்விரு வகுப்பைச் சேர்ந்த மன்னர்களும் இலங்கையை ஆண்டு வந்தார்கள்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">அந்த அரசர்களுள் மணியக்கிகா</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மஹேதரன்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">குலோதரன் ஆகிய நாக வம்சத்து மன்னர்களும்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">குவினி</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மஹாகல சேனன் ஆகிய யக்ஷ வம்சத்து மன்னர்களும் குறிப்பிடத்தகுந்தவர்கள்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">கி</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.543 </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">ஆம் வருடத்திற்கு முன்பு வரை சிங்களவர்கள் இலங்கைக்கு அந்நியர்களாகவே இருந்தார்கள்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span></p>
<p><span style="font-family: Tahoma;"><strong><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">நாகர்களும் யக்ஷர்களும் யார்</span></span></strong></span><strong><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">?</span></span></strong></p>
<p><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">நாகர்கள் என்ற பதத்திற்கும்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">யக்ஷர்கள் என்ற பதத்திற்கும் முறையே சர்ப்பங்களை பூஜிப்பவர்கள் பிசாசங்களைப் பூஜிப்பவர்கள் என்று பொருள்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இலங்கையிலிருந்த புராதனத் தமிழர்கள் சர்ப்பங்களையும் பிசாசங்களையும் பூஜை செய்பவர்களாக இருந்து அது காரணமாக இப்பெயர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடும்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">தவிர பண்டைக் காலத்து திராவிடர்களிற் பொரும்பாலோர் வேட்டையாடுவதையே ஜீவனமாகக் கொண்டிருந்தார்கள்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span></p>
<p><span style="font-family: Tahoma;"><strong><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">சிங்களர் சரிதை என்ன கூறுகிறது</span></span></strong></span><strong><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">?</span></span></strong></p>
<p><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">ஆகையால்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">வேடர்களென்ற பெயரும் அவர்களுக்கு உண்டாயிற்று</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இந்த அபிப்பிராயத்தை திரு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">ஜான் எம்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">செனிவிரத்னா என்ற பிரபல சரித்திர நூலாசிரியர் தம்முடைய சிங்களர் சரிதை என்ற புத்தகத்தில் ஆதரிக்கிறார்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">அவரும் வித்யானுகூல லங்கா இதிகாசபா என்ற நூலின் ஆசிரியரான திரு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">டப்ளியூ</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">எம்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">பெரே ராவும் இலங்கை புராதனக்குடிகளாகிய நாகர்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">யக்ஷர்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">வேடர் ஆகியோர்களைப்பற்றி பின்வருமாறு எழுதியிருக்கின்றார்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span></p>
<p><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">நாகர்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">யக்ஷர்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">,</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">வேடர்ஆகியோர் திராவிட வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மணிக்கீகா</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மஹோ தரன்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">குலோதரன்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">குவினி</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">ராவணன்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மஹாகல சேனன் முதலான திராவிட மன்னர்கள் சிங்களவர்களின் வருகைக்கு முன்னால் இலங்கையை ஆண்டு வந்தவர்கள் அய்ரோப்பியர்கள் அபிப்பிராயம்</span></span></span><span style="font-size: small;">. </span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மேற்படி ஆதாரங்களைத்தவிர டாக்டர் கால்டுவெல்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">டாக்டர் ஜி</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">யு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">போப்முதலான அய்ரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் இவ்வாறே கூறியிருக்கின்றார்கள்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">தமிழர் என்ற தமிழ்ப்பதத்திற்கு திராவிடர் என்பது சமஸ்கிருத மொழிபெயர்ப்பென்றும் ஆகையால் இலங்கையின் பூர்வீகக் குடிகளான திராவிடர்கள் தென்னிந்தியத் தமிழர்களே யென்றும் அவர்கள் ஊர்ஜிதம் செய்திருக்கின்றனர்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span></p>
<p><span style="font-family: Tahoma;"><strong><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">இலங்கையைத் திராவிடர்களே ஆண்டார்கள்</span></span></strong></span></p>
<p><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">சந்திரசேகர பாவலரின் இராமாயண ஆராய்ச்சி </span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">(</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இரண்டாம் பாகம்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">) </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">புரொபசர் எம்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">எஸ்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">பூர்ணலிங்கம் பிள்ளையின் இலங்கைச்சக்கரவர்த்தி இராவணன்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">திரு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">வி</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">பி சுப்பிரமண்ய முதலியாரின் இராமாயண உள்ளுரை திரு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">என்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">எஸ்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">கந்தையா பிள்ளையின் தமிழகம் ஸ்ரீஜத் சிவானந்த சரஸ்வதியின் மதவிசாரணை அகஸ்திய மகாமுனிவரின் அகஸ்தியர் இலங்கை ஸ்வாமி வேதாசலத்தின் மாணிக்கவாசர் சரிதை மாணிக்கநாயனாரின் நாவணாசனம் தேவாரம்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">திருவாசகம் முதலான நூல்களிலும் இதே அபிப்பிராயம் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டிருப்பதை நாம் காணலாம்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span></p>
<p><span style="font-family: Tahoma;"><strong><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">திராவிட நாகரிகம் பரவியிருந்தது</span></span></strong></span></p>
<p><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">சிங்களவர்களின் வருகைக்கு முன் இலங்கையிலிருந்த திராவிடர்களின் நாகரிகம் உச்சஸ்தானத்தையடைந்திருந்தாதாயும் மேற்படி நூல்கள் சாற்றுகின்றன</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இதை திரு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">ஜான்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">எம்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">செனிவிரத்னாவும் தமது சிங்களர் சரிதை என்ற புத்கத்தில் ஆதரித்து எழுதியிருக்கிறார்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இலங்கையை ஆண்ட முதல் சிங்கள மன்னனால் விஜயன் மஹாகலசேனன் என்ற திராவிட மன்னனிடமிருந்து தான் சிங்காதனத்தைப் பெற்றனென்பது மேற்படி சரித்திர ஆசிரியர்களின் திட்டமான அபிப்பிராயம்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">அதோடு இலங்கையை ஆண்ட கடைசி மன்னரும் </span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">(</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">கண்டி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கா</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">) </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">தமிழர்தானென்பதை திரு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">பிளேஸ் ஊர்ஜிதம் செய்கிறார்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span></p>
<p><span style="font-family: Tahoma;"><strong><span style="font-family: times new roman, new york, times, serif;"><span style="font-size: small;">புராதனத் தமிழர்கள் கால்நடையாகவே வந்தார்கள்</span></span></strong></span></p>
<p><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இலங்கையின் புராதனக் குடிகள் தமிழர்களேயென்பதற்கு இது வரையில் அநேக சரித்திர ஆதாரங்களை எடுத்துக்காட்டினோம்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">அதே சரித்திர நூல்களில் இந்தியத் தமிழர்கள் முதன் முதலாக இலங்கைக்கு எப்படி வந்தார்களென்பதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">திரு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">அய்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">ஸி</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மெண்டஸ் என்பவர் தமது இலங்கை சரிதமும்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">உலகசரிதமும் என்ற நூலின் மூன்றாவது பக்கத்தில் இதுவிஷயமாக எழுதியிருப்பதாவது</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இலங்கையின் புராதனக்குடிகளான தென்னிந்தியத் தமிழர்கள் கப்பல்களின் மூலமாகவோ அல்லது படகுகளின் மூலமாகவோ இலங்கைக்கு வரவில்லை</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">அவர்கள் கால்நடையாகவே இலங்கையை வந்தடைந்தார்கள்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span></p>
<p><span style="font-size: small;"></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">அவர்கள் வந்த காலத்தில் இலங்கை தேசம் ஒரு தனித்தீவாக இல்லாமல் இந்தியாவோடு இணைக்கப்பட்டு இந்தியாவின் ஒரு நாடாக இருந்தது</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலுள்ள கடலில் இப்பொழுது சிதறிக்கிடக்கும் ஆதாம்பாலம் </span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">(</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">தற்போது ராமர்பாலம் என்று கதைக்கப்படும் பகுதி</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">) </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">என்பது அக்காலத்தில் உண்மையான நிலப்பாதையாகவே இருந்தது</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">அதன் மூலமாகத்தான் தென்னிந்தியாவிலிருந்தே வேடர்கள் இலங்கைக்கு நடந்து வந்தார்கள்</span><span style="font-family: Tahoma;"> </span><span style="font-family: times new roman, new york, times, serif;">முன்னர் இலங்கை கடலினால் பிரிக்கப்படவில்லை.</span></span></span></p>
<p><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மேற்படி அபிப்பிராயம் திரு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">பி</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">குணசேகரா வின் ராஜாவளி வித்யானாகூல இலங்கா இதிகாசயா மாணிக்க வாசகர் சரிதை ஸர்ஸ்காட் எலியட்டின் மறைந்து போன தீவுகள் முதலான மற்றும் பல நூல்களிலும் ஆதரிக்கப்பட்டிருக்கின்றது தவிர</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">ஈழநாடு எனப்படும் இலங்கையும் பாண்டியநாடு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">சோழநாடு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">சேரநாடு </span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">(</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மலை யாளம்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">) </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">முதலான பிரதேசங்களும் கடலினால் இடையில் பிரிக்கப்படாதிருந்தனவென்பதை அநேக அய்ரோப்பிய ஆசிரியர்களும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span></p>
<p><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">எனவே</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">, </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மேற்படி ஆதாரங்களிலிருந்தும்</span></span></span></p>
<p><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">(1) </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இலங்கையின் பூர்வீகக்குடிகள் இந்தியத்தமிழர்கள்தான்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span></p>
<p><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">(2) </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">அவர்கள் வசித்துவந்த நாட்டில் சிங்களர்களே குடியேறினார்கள்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span></p>
<p><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">(3) </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">சிங்களர்களின் வருகைக்கு முன்னால் இலங்கை தேசம் தமிழ் மன்னர்களின் ஆட்சியிலேயே இருந்தது</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">. </span></span></p>
<p><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">(4) </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">அக்காலத்தில் இலங்கை வாசிகளின் </span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">(</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">இந்தியத்தமிழர்களின்</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">) </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">நாகரிகம் உச்சஸ்தானத்தை அடைந்திருந்தது</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span></p>
<p><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">(5) </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">கி</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">மு </span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">543 </span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">ஆம் வருடத்திற்கு முன்வரை தமிழர்கள் வாழ்ந்துவந்த இலங்கைக்கு சிங்களவர்கள் அந்நியர்களாகவே இருந்தார்கள் என்னும் விஷயங்கள் மறுக்கமுடியாத சரித்திர உண்மைகளாகப் புலப்படுகின்றன</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">.</span></span></p>
<p><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">(</span></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">செட்டி நாடு</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: times new roman, new york, times, serif;">)</span></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&amp;p=411</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புகழேந்தியின் தூரிகை சொல்வதென்ன?</title>
		<link>http://www.thanall.com/?p=409</link>
		<comments>http://www.thanall.com/?p=409#comments</comments>
		<pubDate>Wed, 11 Aug 2010 09:25:45 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=409</guid>
		<description><![CDATA[குருதியும் வடுக்களும் ஏற்பட்டதேன்?
அகிம்சையும் மனிதமும் மரணித்ததன் காரணமே.
அறப்போரின் தோல்வியே காரணமாக இருந்தால் குருதியும் வடுக்களும் தோன்றாதிருந்திருக்கும்.
அதுவே அடிமைத்தன வாழ்வின் தோற்றுவாயாய் இருந்திருக்கும்.
அடிமை வாழ்வு தொடர்ந்திருந்தால் ஈழப்பாவைகளின் முலைகளில் சிங்கள வாரிசுகள் இன்றுவரை பால்குடிக்கும்.
தன்மானத் தமிழர் சிலர் விடுதலையின்பால் கொண்ட வேட்கையே ஈழத்துக் குருதி சிந்தல்.
ஓவியர் புகழேந்தி தூரிகை மூலம் மனிதநேய விரும்பிகளின் மனத்திரையில் கீறமுனையும் செய்திச் சித்திரமும் இதுதான். 
கனகசபை தேவகடாட்சம்
திருக்கோணமலை
trincokadatcham@yahoo.com 
ஓவியர் புகழேந்தியின் ஓவியக்கண்காட்சி இம்மாதம் 12 ம் திகதி தமிழகத்தில் நடைபெறுவதையிட்டு ஒரு செய்தி.
http://www.oviarpugazh.com/
]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-family: Tahoma;"><img class="alignleft" src="http://t1.gstatic.com/images?q=tbn:icxJTTZGnCFr5M:http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/S-gXiyA1ETI/AAAAAAAAIeo/BwHGj-2pyBk/s1600/Pukalenthi+oviyar.jpg" alt="" width="128" height="86" />குருதியும் வடுக்களும் ஏற்பட்டதேன்</span>?</p>
<p><span style="font-family: Tahoma;">அகிம்சையும் மனிதமும் மரணித்ததன் காரணமே</span>.<span id="more-409"></span></p>
<p><span style="font-family: Tahoma;">அறப்போரின் தோல்வியே காரணமாக இருந்தால் குருதியும் வடுக்களும் தோன்றாதிருந்திருக்கும்</span>.</p>
<p><span style="font-family: Tahoma;">அதுவே அடிமைத்தன வாழ்வின் தோற்றுவாயாய் இருந்திருக்கும்</span>.</p>
<p><span style="font-family: Tahoma;">அடிமை வாழ்வு தொடர்ந்திருந்தால் ஈழப்பாவைகளின் முலைகளில் சிங்கள வாரிசுகள் இன்றுவரை பால்குடிக்கும்</span>.</p>
<p><span style="font-family: Tahoma;">தன்மானத் தமிழர் சிலர் விடுதலையின்பால் கொண்ட வேட்கையே ஈழத்துக் குருதி சிந்தல்</span>.</p>
<p><span style="font-family: Tahoma;">ஓவியர் புகழேந்தி தூரிகை மூலம் மனிதநேய விரும்பிகளின் மனத்திரையில் கீறமுனையும் செய்திச் சித்திரமும் இதுதான்</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">கனகசபை தேவகடாட்சம்</span></p>
<p><span style="font-family: Tahoma;">திருக்கோணமலை</span></p>
<p><a href="mailto:trincokadatcham@yahoo.com">trincokadatcham@yahoo.com</a> </p>
<p><span style="font-family: Tahoma;">ஓவியர் புகழேந்தியின் ஓவியக்கண்காட்சி இம்மாதம் 12 </span>ம் திகதி <span style="font-family: Tahoma;">தமிழகத்தில் நடைபெறுவதையிட்டு ஒரு செய்தி</span>.</p>
<p><a href="http://www.oviarpugazh.com/">http://www.oviarpugazh.com/</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&amp;p=409</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இதை முதல் அறி! (கவிதை) &#8211; கனகசபை தேவகடாட்சம்</title>
		<link>http://www.thanall.com/?p=406</link>
		<comments>http://www.thanall.com/?p=406#comments</comments>
		<pubDate>Wed, 11 Aug 2010 08:43:40 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=406</guid>
		<description><![CDATA[நாடென்ன சொன்னது?
காடென்ன சொன்னது?
இதனுள் நீயென்ன கற்றுக்கொண்டாய் கூறு!
&#8216;பிரம்மம்&#8217; இல்லையென்ற புத்தருக்கு ஆலயங்கள்
தத்துவாத்துவ உலகிற்கு கெளதமர் ஓர் சவால்
ஞானம் மோனம் நற்பண்பு
இவை புத்தரின் &#8216;அனாத்மவாதம்&#8217;
காட்டுக்குள் நான்!
நாட்டுக்குள் நீ!
சிறைக்குள் பெளத்தம்!
யாகத்தில் உயிர்ப்பலி வேண்டாம்
உன்னை விடுவித்துக்கொள்ள சுயநல வேள்வி வேண்டாம்
&#8216;சோதண்ட சூத்திரம்&#8217; ஊடாய் சொன்ன கெளதமரே
நீங்கள் எங்கே?
நாங்கள் எங்கே?
அவர்கள் எங்கே?
&#8216;அதர்வணத்தை&#8217; வேதமாக கொண்டவர்களே
அகிம்சைகொண்ட ஐவகை சீலங்கள் எதற்கு?
&#8216;இருக்கு வேத சங்கிதை&#8217; யை பின்பற்றுங்கள்
அல்லது &#8216;அதர்வணம்&#8217; தழுவிய அதர்மத்தைப் பற்றுங்கள்
அதுவரை,
கொல்லாமை பற்றி பேசாதீர்கள்
உலகை ஒரு &#8216;சிறங்கை&#8217; க்குள் கொண்டு வந்ததாக கணணிக்கு நினைப்பு
என்ன&#8230; [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="alignleft" src="http://t3.gstatic.com/images?q=tbn:BKAH49gQ1lEMAM:http://i293.photobucket.com/albums/mm70/enlasador/budha.gif" alt="" width="113" height="120" />நாடென்ன சொன்னது?</p>
<p>காடென்ன சொன்னது?</p>
<p>இதனுள் நீயென்ன கற்றுக்கொண்டாய் கூறு!<span id="more-406"></span></p>
<p>&#8216;பிரம்மம்&#8217; இல்லையென்ற புத்தருக்கு ஆலயங்கள்</p>
<p>தத்துவாத்துவ உலகிற்கு கெளதமர் ஓர் சவால்</p>
<p>ஞானம் மோனம் நற்பண்பு</p>
<p>இவை புத்தரின் &#8216;அனாத்மவாதம்&#8217;</p>
<p>காட்டுக்குள் நான்!</p>
<p>நாட்டுக்குள் நீ!</p>
<p>சிறைக்குள் பெளத்தம்!</p>
<p>யாகத்தில் உயிர்ப்பலி வேண்டாம்</p>
<p>உன்னை விடுவித்துக்கொள்ள சுயநல வேள்வி வேண்டாம்</p>
<p>&#8216;சோதண்ட சூத்திரம்&#8217; ஊடாய் சொன்ன கெளதமரே</p>
<p>நீங்கள் எங்கே?</p>
<p>நாங்கள் எங்கே?</p>
<p>அவர்கள் எங்கே?</p>
<p>&#8216;அதர்வணத்தை&#8217; வேதமாக கொண்டவர்களே</p>
<p>அகிம்சைகொண்ட ஐவகை சீலங்கள் எதற்கு?</p>
<p>&#8216;இருக்கு வேத சங்கிதை&#8217; யை பின்பற்றுங்கள்</p>
<p>அல்லது &#8216;அதர்வணம்&#8217; தழுவிய அதர்மத்தைப் பற்றுங்கள்</p>
<p>அதுவரை,</p>
<p>கொல்லாமை பற்றி பேசாதீர்கள்</p>
<p>உலகை ஒரு &#8216;சிறங்கை&#8217; க்குள் கொண்டு வந்ததாக கணணிக்கு நினைப்பு</p>
<p>என்ன&#8230; குழப்பமாக இருக்கிறதா?</p>
<p>நான்மட்டும் குழம்பவில்லை</p>
<p>நாடுமட்டுமல்ல, உலகே குழம்பி நிற்கிறது</p>
<p>எதற்காக இந்த ஒத்திகைகள்?</p>
<p>எப்போ கொம்புக்குமண் எடுப்போம் என்பதற்காகவே</p>
<p>பூகோளத்தின் மௌனங்கள்</p>
<p>இன்னமும் புரியவில்லையா? </p>
<p>நகரும் காலங்கள் விரைவில் புரியவைக்கும்! </p>
<p>விளக்கம் </p>
<p>பிரம்மம்:- இறைவன்</p>
<p>அனாத்மவாதம்:- உயிர் நிலையற்றதென புத்தர் கூறியதால் பெளத்தத்திற்கு இது இன்னுமொரு பெயர்.</p>
<p>சோதண்ட சூத்திரம்:- &#8216;கொல்லாமை&#8217; பற்றி கெளதமர் கூறிய ஒரு முக்கிய பகுதி.</p>
<p>அதர்வண வேதம்:- பிறருக்கு தீங்கு செய்யுமாறு இறைவனை வழிபாடும் மதம்.</p>
<p>இருக்கு வேதம்:- உலகத்தின் இயக்கம் தொடர்பானதும், &#8216;ஒரு கடவுள்&#8217; கொள்கையைக் கொண்டதுமான வேதம்.</p>
<p>சிறங்கை:- ஒரு உள்ளங்கை அளவு.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&amp;p=406</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>படிக்கவேண்டும் புதிய பாடம்!!</title>
		<link>http://www.thanall.com/?p=398</link>
		<comments>http://www.thanall.com/?p=398#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 09:55:03 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=398</guid>
		<description><![CDATA[தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இருப்பினும் தமிழ்மக்களின் மனங்களின் தடம்பதித்த சில வரலாற்றுத் துணுக்குகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும். ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பது கஷ்டம் மிகுந்த அத்தியாயம். அதன் கட்டமைப்பு குலையாமல் மூன்று தசாப்தங்கள் வரை நகர்த்தி வந்தது என்பது பெரும் எதிர்நீச்சல்கள் மலிந்த அத்தியாயம். 
இக்கட்டமைப்பு குலைபடாமல் தொடர்ச்சியாக கொண்டுசெல்லப்பட வேண்டுமாயின் &#8216;பேதங்கள் மறந்த ஒற்றுமை&#8216; அவசியம். புலத்திலும் தலத்திலும் &#8216;சிங்களம்&#8216; தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமையீனத்தை உருவாக்கி தமிழர் உரிமைகளை பறிப்பதற்கான காய்நகர்த்தல்களை செய்து வெற்றிகொண்டு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-family: Tahoma;"><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/5-Tamil-Movement.bmp"><img class="alignleft size-full wp-image-399" title="5 Tamil Movement" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/5-Tamil-Movement.bmp" alt="" /></a>தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு</span>. <span style="font-family: Tahoma;">இருப்பினும் தமிழ்மக்களின் மனங்களின் தடம்பதித்த சில வரலாற்றுத் துணுக்குகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும்</span>. <span id="more-398"></span><span style="font-family: Tahoma;">ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பது கஷ்டம் மிகுந்த அத்தியாயம்</span>. <span style="font-family: Tahoma;">அதன் கட்டமைப்பு குலையாமல் மூன்று தசாப்தங்கள் வரை நகர்த்தி வந்தது என்பது பெரும் எதிர்நீச்சல்கள் மலிந்த அத்தியாயம்</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">இக்கட்டமைப்பு குலைபடாமல் தொடர்ச்சியாக கொண்டுசெல்லப்பட வேண்டுமாயின் </span>&#8216;<span style="font-family: Tahoma;">பேதங்கள் மறந்த ஒற்றுமை</span>&#8216; <span style="font-family: Tahoma;">அவசியம்</span>. <span style="font-family: Tahoma;">புலத்திலும் தலத்திலும் </span>&#8216;<span style="font-family: Tahoma;">சிங்களம்</span>&#8216; <span style="font-family: Tahoma;">தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமையீனத்தை உருவாக்கி தமிழர் உரிமைகளை பறிப்பதற்கான காய்நகர்த்தல்களை செய்து வெற்றிகொண்டு வருவதை நாம் உணர்தல் வேண்டும்</span>. <span style="font-family: Tahoma;">எல்லைகள் அற்ற தடைகளைத் தாண்டி இயக்கம் வளர்ந்துள்ளது என்பதை காட்டுவதற்கு எத்தனையோ வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கலாம்</span>. <span style="font-family: Tahoma;">கடந்த கால அத்தியாயங்களில் வரலாற்றின் ஒரு பகுதியைப் படிப்பினைக்காக பார்ப்போம்</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">சந்ததியார்</span>, <span style="font-family: Tahoma;">கண்ணன்</span>, <span style="font-family: Tahoma;">பார்த்தன்</span>, <span style="font-family: Tahoma;">சுந்தரம்</span>, <span style="font-family: Tahoma;">உமாமகேஸ்வரன்</span>, <span style="font-family: Tahoma;">பொபி</span>, <span style="font-family: Tahoma;">தாஸ்</span>, <span style="font-family: Tahoma;">பற்குணம்</span>, <span style="font-family: Tahoma;">மைக்கல்</span>, <span style="font-family: Tahoma;">மாத்தையா</span>, <span style="font-family: Tahoma;">கௌசல்யன்</span>, <span style="font-family: Tahoma;">அற்புதன்</span>(EPDP), <span style="font-family: Tahoma;">யோகேஸ்வரன்</span>, <span style="font-family: Tahoma;">தர்மலிங்கம்</span>, <span style="font-family: Tahoma;">அமிர்தலிங்கம் இவர்கள் எப்படி மரணித்தார்கள் என்பதை எனக்கோ உங்களுக்கோ விபரம் தெரியாது</span>, <span style="font-family: Tahoma;">ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும்</span>, <span style="font-family: Tahoma;">ஆரம்பகால உறுப்பினர்களுக்கும்</span>, <span style="font-family: Tahoma;">அதைச் செய்தவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும்</span>. <span style="font-family: Tahoma;">இவர்கள் எல்லோரும்</span>(<span style="font-family: Tahoma;">ஸ்ரீ சபாரத்தினம்</span>, <span style="font-family: Tahoma;">பத்மநாபா</span>, <span style="font-family: Tahoma;">உமாமகேஸ்வரன்</span>, <span style="font-family: Tahoma;">பிரபாகரன்</span>, <span style="font-family: Tahoma;">பாலகுமார்</span>) <span style="font-family: Tahoma;">தமிழ் மக்களின் விடிவிற்காகவும்</span>, <span style="font-family: Tahoma;">தமிழீழ மலர்வுக்காகவும் சிங்களத்திற்கெதிராக போராட புறப்பட்டவர்களே ஆவார்கள்</span>. <span style="font-family: Tahoma;">பலர் இந்த போராட்டத்தை மழுங்கடிக்க நினைத்த அன்னிய ஆதிக்க சக்திகளின் சதி வலைக்குள் சிக்கி சின்னாபின்னமாகிப் போனார்கள்</span>. <span style="font-family: Tahoma;">இவர்களில் இறுதிவரை நின்று இலட்சியம் மாறாமல் வெற்றி பெற்றவர்கள் விடுதலைப்புலிகள் மட்டுமே</span>. <span style="font-family: Tahoma;">இருப்பினும் கடைசியில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் பலரையும் சர்வதேச சதிவலைக்குள் சிறுகச் சிறுக சிக்க வைத்துவிட்டார்கள்</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">தமிழீழ விடுதலைக்காக அடியெடுத்து வைத்த தலைவர்களை உண்மையிலேயே விசுவாசிப்பதாக இருந்தால்</span>,</p>
<p><span style="font-family: Tahoma;">அவர்கள் முதல் அடியெடுத்து வைத்த நோக்கம்</span>, <span style="font-family: Tahoma;">கொள்கை தமிழீழத் தாயகத்துக்காகத்தானென்றால்</span>(<span style="font-family: Tahoma;">தமிழரின் தாகம்</span>),</p>
<p><span style="font-family: Tahoma;">தேசத்தின் விடிவிற்காய் உயிர்நீத்த அனைவரும் மாவீரர்கள்தான் என்றால் </span></p>
<p><span style="font-family: Tahoma;">பிரிந்து நின்று கூத்தாடிக் கோஷமிடுவதை விடுத்து அவர்களின் கனவை நனவாக்குங்கள்</span>.</p>
<p><span style="font-family: Tahoma;">தற்பொழுது யாரை யார் கொன்றார்கள்</span>, <span style="font-family: Tahoma;">ஏன் கொன்றார்கள் என்பதுவல்ல எமது பிரச்சனை</span>. <span style="font-family: Tahoma;">நாம் எல்லோரும் விடுதலை இயக்கங்களை ஆரம்பித்து</span>, <span style="font-family: Tahoma;">அவற்றில் இணைந்து போராட புறப்பட்ட நோக்கம்</span>, <span style="font-family: Tahoma;">தேவை இன்னும் தீர்க்கப்படவுமில்லை</span>, <span style="font-family: Tahoma;">அடையப்படவுமில்லை</span>. <span style="font-family: Tahoma;">இன்னும் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது</span>. <span style="font-family: Tahoma;">தமிழர்கள் நாங்கள் தெளிவாக ஒன்றைமட்டும் புரிந்துகொள்ள வேண்டும்</span>. <span style="font-family: Tahoma;">தமிழர்கள்</span>, <span style="font-family: Tahoma;">சிங்களவர்களால் மெல்ல மெல்ல ஒழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும்</span>, <span style="font-family: Tahoma;">தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும்</span>, <span style="font-family: Tahoma;">தமிழர்கள் எந்த உரிமையுமின்றி சிங்களவர்களின் அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் இன்னமும் உணரமுடியாமல் இருப்பது பெரும் வேதனைக்குரியது</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">எமது உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்</span>.</p>
<p><span style="font-family: Tahoma;">எமது சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும்</span>.</p>
<p><span style="font-family: Tahoma;">எமக்கென்று ஒரு நாடு வேண்டும்</span>.</p>
<p><span style="font-family: Tahoma;">அதற்காக சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடவேண்டும்</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">அதை விடுத்து அவன் </span>LTTE, <span style="font-family: Tahoma;">இவன் </span>PLOTE, <span style="font-family: Tahoma;">நான் </span>TELO, <span style="font-family: Tahoma;">நீ </span>EPRLF, <span style="font-family: Tahoma;">கிழக்கு</span>, <span style="font-family: Tahoma;">வடக்கு என்ற பிரிவினை வாதங்களை விடுத்து ஒரு குடையின் கீழ் நின்று எமது பொது எதிரியை</span>, <span style="font-family: Tahoma;">அந்நிய ஆதிக்க சக்திகளை எதிர்த்து வெற்றிகொள்ள வேண்டும்</span>. <span style="font-family: Tahoma;">தமிழன் மீண்டும் தலை நிமிர்ந்து இந்த உலகத்தின் ஒரு முன்மாதிரியான இனமாக வாழ்ந்து காட்டவேண்டும்</span>. </p>
<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/4lanka.jpg"><img class="alignnone size-full wp-image-401" title="4lanka" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/4lanka.jpg" alt="" width="369" height="242" /></a></p>
<p><span style="font-family: Tahoma;">யூத இனத்தின் ஒற்றுமையின் பலத்தையும்</span>, <span style="font-family: Tahoma;">திறனாற்றல் குணாதிசயங்களையும் கண்டறிந்த மேற்குலகமும் அரபுக்களும் அவர்களை அழிக்க நினைத்தார்கள்</span>, <span style="font-family: Tahoma;">ஆனால் அவர்கள் தமது ஒற்றுமையால் இன்று உலகே வியக்கும் வண்ணம்</span>, <span style="font-family: Tahoma;">பயப்படும் வண்ணம் வளர்ந்து நிற்கிறார்கள்</span>. <span style="font-family: Tahoma;">தமிழர்களுக்கிடையில் உள்ள ஒரே காரணியான ஒற்றுமையின்மையே சிங்களவர்களுக்கு வாய்ப்பாகிறது</span>. <span style="font-family: Tahoma;">அத்தோடு தமிழர்களை வளர விட்டால் தமக்கு ஆபத்து வந்துவிடும் என நினைக்கும் அன்னிய ஆதிக்க சக்திகளும் தமிழர்களின் இந்த நிலையை சரிவர பயன்படுத்துகிறார்கள்</span>. </p>
<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/prabha-Uma.jpg"><img class="alignnone size-full wp-image-400" title="prabha Uma" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/prabha-Uma.jpg" alt="" width="394" height="245" /></a></p>
<p><span style="font-family: Tahoma;">ஆரம்ப காலத்தில் உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு நீக்கப்பட்டபோது சரியோ தவறோ தமிழர் ஒற்றுமையைப் பற்றி மட்டுமே சிந்தித்திருப்பாராயின்</span>, <span style="font-family: Tahoma;">போராடச்சென்ற நோக்கத்தை சற்று யோசித்துப் பார்த்திருப்பாராயின் வேறொரு இயக்கத்தை ஆரம்பிக்காது ஒதுங்கியிருக்கலாம்</span>. <span style="font-family: Tahoma;">அப்படி ஒதுங்கியிருந்தால் எத்தனையோ இளைஞர்கள் அவர்கள் சென்ற பாதையை விட்டு விலகியிருக்க மாட்டார்கள்</span>.<span style="font-family: Tahoma;">மாறாக சென்றபாதையை திசை திருப்பி விடுதலைப்புலிகளுடன் இணைந்து மேலும் தமிழீழத்துக்கான போராட்டத்துக்கு வலுச் சேர்த்திருப்பார்கள்</span>. <span style="font-family: Tahoma;">மேலும்</span>, PLOTE <span style="font-family: Tahoma;">இயக்கத்தில் இருந்தவர்கள் காரணமின்றி கொத்துக் கொத்தாக உட்கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்</span>. <span style="font-family: Tahoma;">அந்த இளைஞர்களின் போராட்ட சக்தி</span>, <span style="font-family: Tahoma;">ஆட்பலம் என்பன இந்த போராட்டத்திற்கு பயன்படாமலேயே மூழ்கடிக்கப்பட்டிருக்கப்பட மாட்டாது</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">பிற்காலத்தில் </span>PLOTE <span style="font-family: Tahoma;">போராளிகள் தேசியம்</span>, <span style="font-family: Tahoma;">சுயநிர்ணயம் தனிஈழம் என்ற ஒரே கொள்கையின்கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட முடியாமலேயே போய்விட்டது</span>. <span style="font-family: Tahoma;">அதற்கான காரணம் விடுதலைப்புலிகளின் அணியில் இணைவதற்கு உயிருக்கு உத்தரவாதமற்ற நம்பிக்கையீனம்</span>. <span style="font-family: Tahoma;">அக்கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை விட மேலதிக எண்ணிக்கையான எத்தனையோ வீர மறவர்கள்</span>, <span style="font-family: Tahoma;">இன உணர்வுள்ள இளைஞர்கள்</span>, <span style="font-family: Tahoma;">திறமையான போராளிகள்</span>, <span style="font-family: Tahoma;">சிந்தனைவாதிகள்</span>(<span style="font-family: Tahoma;">தராக்கி சிவராம் போன்றோர்</span>) <span style="font-family: Tahoma;">ஏனைய இயக்கங்களில்</span>(PLOTE, TELO, EPRLF, EROS <span style="font-family: Tahoma;">போன்ற</span>) <span style="font-family: Tahoma;">உள்வாங்கப்பட்டிருந்தார்கள்</span>. </p>
<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/karuna+praba.bmp"><img class="alignnone size-full wp-image-402" title="karuna+praba" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/karuna+praba.bmp" alt="" /></a></p>
<p><span style="font-family: Tahoma;">இதேபோல கருணா பிற்காலத்தில் பிரபாகரனால் வன்னிக்கு அழைக்கப்பட்டபோது பிழை செய்தாரோ இல்லையோ தமிழர் ஒற்றுமையை மட்டுமே சிந்தித்திருப்பாராயின்</span>, <span style="font-family: Tahoma;">தமிழர் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்திருப்பாராயின்</span>, <span style="font-family: Tahoma;">வடக்கு கிழக்கு என்று போராளிகளுக்குள் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாதென்று எண்ணியிருப்பாராயின்</span>, <span style="font-family: Tahoma;">விடுதலைப்புலிகள் அழிந்துவிடக்கூடாதென்று உறுதியாய் இருந்திருப்பாராயின் மரணதண்டனையேயாயினும் ஏற்று வன்னி சென்றிருப்பார்</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">எதை எதை சிங்களவனும் அன்னிய ஆதிக்க சக்திகளும் எதிர்பார்க்கின்றனவோ அதையே தான் நாமும் செய்துகொண்டு இருக்கிறோம்</span>, <span style="font-family: Tahoma;">எதிர்காலத்தில் செய்யவும் போகிறோம்</span>. <span style="font-family: Tahoma;">காட்டிக்கொடுப்பதிலும் துரோகம் செய்வதிலும் நாம் தமிழர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்</span>. <span style="font-family: Tahoma;">இவர்கள் எவ்வளவு தான் வீரம் நிறைந்த போராளிகளாகவும்</span>, <span style="font-family: Tahoma;">மதிநுட்பமிக்க திறமைசாலிகளாகவோ இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ அன்னிய ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது மட்டுமல்லாமல் தமிழர் வரலாற்றில் மாறாத வடுவாக பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை ஆட்சேபிக்க முடியாது</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">நாம் சிங்கள மற்றும் அன்னிய ஆதிக்க சக்திகளின் திட்டம் நிறைவேற ஒத்துழைப்பதற்காக பிரிந்தே நிற்கிறோம்</span>. <span style="font-family: Tahoma;">அதாவது இந்திய நலனிற்காக இந்தியாவை வழிநடாத்தும் </span>RAW <span style="font-family: Tahoma;">அமைப்பு தமிழீழ போராட்டத்தை அழிப்பதற்காக அதில் ஒரு நடவடிக்கையாக விடுதலைப்புலிகளை ஆத்திரமூட்டி இந்திய மக்களால் நேசிக்கப்படும் ஒரு தலைவரை அவர் எவராக இருப்பினும் கொலைசெய்ய வைத்தால் விடுதலைப்புலிகள் மேல் வைத்திருக்கும் ஆதரவை இந்தியத் தமிழ்மக்களிடமும் இந்திய மக்களிடமுள்ள தமிழீழ ஆதரவுத் தளத்தையும் உடைத்தெறிவதே ஒரே வழி என முடிவுசெய்தார்கள்</span>. <span style="font-family: Tahoma;">பின் செய்தும் முடித்தார்கள்</span>, <span style="font-family: Tahoma;">அதில் வெற்றியும் பெற்றார்கள்</span>. </p>
<p><span style="font-family: Tahoma;">தமிழ் இயக்கங்களுக்கிடையில் விரோதத்தை வளர்த்தார்கள்</span>. <span style="font-family: Tahoma;">டக்லஸ் தேவானந்தா போன்றவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் கொலை கொள்ளை நடாத்தி ஒட்டுமொத்த இந்தியத் தமிழர்கள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் ஒரு வெறுப்பை தோற்றுவித்தார்கள்</span>. <span style="font-family: Tahoma;">இலங்கையிலே தமிழர் தலைவர்களை இயக்களைக் கொண்டே கொல்லவைத்து இலங்கைத் தமிழர்களிடையே இயக்கங்கள் மேலான வெறுப்பைத் தோற்றுவித்தார்கள்</span>. </p>
<div>இவற்றிலிருந்து நாம் படிக்கவேண்டிய புதிய பாடம் ஒற்றுமை என்பது புலனாக வில்லையா?</div>
<p><span style="font-family: Tahoma;">அன்பான தமிழ் மக்களே</span>! </p>
<p><span style="font-family: Tahoma;">ஏன் இன்னும் நாம் விழித்துக் கொள்ளாமல் இருக்கிறோம்</span>??? <span style="font-family: Tahoma;">ஏன் இன்னும் இன்னும் எம்மை நாமே அழிப்பதற்கு துணைபோகின்றோம்</span>??? <span style="font-family: Tahoma;">தயவுசெய்து சிந்தியுங்கள்</span>!!!!!!!! </p>
<p><span style="font-family: Tahoma;">முரளி நடேசன்</span></p>
<p><a href="mailto:tmnadesan@hotmail.com">tmnadesan@hotmail.com</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&amp;p=398</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நெஞ்சினில் நெருப்பேந்தி &#8220;தமிழர் மீண்டும் கிளர்ந்து எழுவர்&#8221;!</title>
		<link>http://www.thanall.com/?p=390</link>
		<comments>http://www.thanall.com/?p=390#comments</comments>
		<pubDate>Sun, 25 Jul 2010 23:34:09 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=390</guid>
		<description><![CDATA[&#8220;.அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை&#8230; சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள  பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/Sanku-Mulakkam.bmp"><img class="alignleft size-full wp-image-391" title="Sanku Mulakkam" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/Sanku-Mulakkam.bmp" alt="" width="152" height="100" /></a>&#8220;.அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. <span id="more-390"></span>புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை&#8230; சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள  பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது&#8230; &#8220; </p>
<p>தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்</p>
<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/prabakaran1.bmp"><img class="alignnone size-full wp-image-393" title="prabakaran" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/prabakaran1.bmp" alt="" /></a><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/prabakaran.bmp"></a></p>
<p><a rel="nofollow" href="http://www.infotamil.ch/ta/view.php?20ESoC20esgYI2ebcA6M3adJdAK4dc4Yl2cc40oS2d43mOE3a02QMO2e" target="_blank">இந்த வருடம் 83 கறுப்பு ஜூலை கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான ஒரு தலைமை இல்லாது உள்ள நிலையில்</a> இலங்கை அரசு தொடர்ந்தும் இலட்சம் வரையான தமிழர்களைத் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கிறது. அத்தோடு 10,000 வரையான இள வயதினர் வெளிப்படுத்தப்படாத இடங்களில் சிங்கள இராணுவத்தினரால் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாகி வருகின்றனர். இந்த ஆண்டில் தமிழர்களின் திடசங்கற்பமாக அரசியல் வழிமுறைகள் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை தொடரச் சபதம் கொண்டுள்ளனர். மேலும் சர்வதேச சமூகத்தினை வற்புறுத்தி இலங்கை அரசை இன அழிப்புப் போர் குற்றங்களுக்காக நீதி விசாரணைக்கு உட்படுத்தவும், இலங்கை அரசின் சிறைக் கைதிகளாக உள்ள தமிழரை விடுவிக்கவும் சபதம் எடுத்துள்ளனர்.</p>
<p>இருபத்தேழு வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புக் கலவரத்தை முன்னெடுத்து நடத்தி 3000 தமிழரின் உயிரையும் மூவாயிரம் இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதி உள்ள தமிழரின் சொத்து அழிப்பையும் ஏற்படுத்தியது. 1983 ஜூலை 24 முதல் ஜூலை 30 வரையான தினங்கள் தமிழ் மக்கள் மனதில் மறக்கமுடியாத அவல நாட்களாக ஆழப்பதிந்து விட்டன. தமிழர்கள் இம்மாதத்தை கரிபடிந்த மாதமாக கடைப்பிடிப்பது மட்டும் இல்லாமல் இந்த மாதத்தை தமிழர் தமது எதிரிகளை எப்படி எதிர்கொண்டு மேலும் செயற்படுவது பற்றிய சபதம் எடுக்கும் மாதமாகவும் கருதுகின்றனர்.</p>
<p>உலகில் வாழும் 800 இலட்சம் தமிழர்கள் வாழும் நிலையிலும் தமிழருக்கு ஆட்சி அதிகாரம் கொண்ட ஒரு நாடு இல்லாதுள்ளது. தமிழர் எங்கும் உள்ளனர் அந்தந்த நாடுகள் செழிக்கக் கடினமாக உழைப்பவர்கள் என மட்டுமே ஆறுதல் அடையமுடிகிறது.</p>
<p>ஐக்கிய நாடுகளின் சபையால் அங்கீகரிக்கப்பட மற்றும் அழுத்தம் கொடுக்குமளவு தமிழர்களுக்கு செல்வாக்கு இல்லை. ஆயிரக்கணக்கில் அவர்கள் இலங்கையில் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் கொல்லப்பட்ட போது உலகத் தமிழரால் தாமிருக்கும் நாடுகளின் அரசை உதவக்கேட்டு வீதிகளில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்வதைத் தவிர வேறு எந்தவித உதவியும் செய்ய முடியவில்லை. என்ன நடந்தும் ஏறக்குறைய எல்லா நாடுகளுமே அடக்குமுறைக்கு ஆளான மக்களுக்கு உதவாது அரசின் இறையாண்மையைக் காரணம் காட்டி அடக்குமுறை அரசான சிங்கள அரசுக்கு ஆதரவை வழங்கின. மே 2009ல் ஒரு சில நாட்களில் 30,000 தமிழரைக் கொன்றது உட்பட 100,000 தமிழரின் உயிரைப் பறித்த அரசின் இன அழிப்புப் போரை நடத்திய இலங்கை அரசைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ முயலவில்லை. இப்பொழுது வவுனியாவில் யேர்மன் நாசிகளின் கொலைக் களங்களை ஒத்த தடுப்பு முகாம்களில் எல்லாத் தமிழரும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 10,000க்கும் அதிகமானோர் இரகசிய இடங்களில் மேலதிக விசாரணைகள் என்ற சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>பிரச்சனையைப் புலம்பெயர் தமிழர் கையில் எடுத்துவிட்டனர்</p>
<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/Pulampeyar-makkal.bmp"><img class="alignnone size-full wp-image-394" title="Pulampeyar makkal" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/Pulampeyar-makkal.bmp" alt="" /></a></p>
<p>இப்பொழுது உள்ள கள நிலைக்கு மாறாக, புலிகள் இராணுவ ரீதியாக மே 2009ல் தோற்கடிக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் இன்னமும் அரச வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அரசு ஆதரவு கொண்ட துணை இராணுவக் குழுக்களின் தொடர்ச்சியான மிரட்டலுக்கு தமிழ் மொழி ஊடக வெளியீட்டுச் சாதனங்கள் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளன. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியர்கள், மருத்துவசாலை இயக்குநர்கள் உட்பட இன்னும் பல தரப்பினர் தடுப்புக்காவலுக்கு கூட்டிச் செல்லப்பட்டு அவர்களால் தேசிய பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றனர். மேலும், இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ளவர்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இவை தமிழீழக் கனவை முற்றாக நசுக்கி விட்டதாகக் கூறிவரும் போதிலும் இக்கொலைகள் இராணுவத் தடுப்புக் காவலில் உள்ள தமிழ் மக்களுக்கும் ஏற்படுகின்றன. இந்நிலையில் புலம்பெயர் தமிழர்களுக்கு ஈழத் தமிழரின் விடுதலையை தமிழீழ விடுதலைப் புலிகளின் வழியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தார்மீகக் கடப்பாடு இருக்கின்றது. நின்று விட்ட இடத்திலிருந்து தமிழீழ விடுதலைப் போரை நகர்த்திச் செல்ல வேண்டிய பொறுப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு புலம்பெயர் மக்களிடத்தில் சுமத்தியுள்ளது.</p>
<p>இந்த வருடம், “மீண்டும் எழுவோம்” என்ற குரலுடன் புலம்பெயர் தமிழர் சபதம் எடுத்து அமைதி வழி ஆர்ப்பாட்டங்களைத் தாம் வாழும் நாடுகளில் தமது நாட்டு அரசுகளைத் தமது அரசியல் கோரிக்கைகளை மறந்து விடாது நினைவூட்டி வருகின்றனர். சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் இலங்கை அரசின் தமிழின அழிப்புப் போர்க்குற்றங்களை விசாரணைக்கு உட்படுத்தவும் வற்புறுத்தி வருகின்றனர்.</p>
<p>இலங்கை இராணுவத்துக்கும் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இடையில் போர் தொடங்குவதற்கு முன்பாகத் தமிழர்கள் அமைதிவழியில் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய போது என்ன நடந்தது என இச்சந்தர்ப்பத்தில் நினைவு கொள்வது பயன் தருவதாக இருக்கும். 1956ல் இருந்தே தமிழருக்கு எதிரான சிங்களவரின் வன்முறைகள் இருந்துள்ள போதிலும், 1983 ஜூலைக் கலவரத்துக்கு மூல காரணமாக இருந்தது யாழில் ஏற்பட்ட 13 சிங்கள இராணுவத்தினரது மரணம் எனப் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஆனாலும் 1983 ஜூலைக் கொடுமைகள் சர்வதேச சமூகத்தினது கவனத்தையும் இந்தியாவின் நேரடித் தலையீட்டையும் தமிழருக்கு ஆதரவாக பெற்றுக்கொடுத்தது.</p>
<p>1983 ஜூலைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக மே 11, 1983ல், பெரதேனிய சர்வகலாசாலையில் சிங்கள மாணவர் தமிழ் மாணவர்களைத்தாக்கினர். தொடர்சியாக 3 தினங்களுக்குத் தமிழ் மாணவர்கள் சிங்கள சமூகத்தின் வெறுப்பின் கொடுமையை அனுபவித்தனர். ஆனால் சர்வகலாசாலை நிர்வாகமும் கல்விமான்களும் நாட்டின் ஆட்சியாளரும் தமிழ் மாணவருக்கு எதிரான அந்த வன்முறையை நிறுத்தக் கடுகளவும் முயற்சி செய்யவில்லை.</p>
<p>பழைய மாணவர்கள் சர்வகலாசாலை நிர்வாகத்தினதும் அதிகாரிகளினதும் இது காலவரை கடைப்பிடித்து வந்த நடைமுறை இல்லாது போனதை அவதானித்தனர். தாம் உடனடியாகத் தமது வீடுகளுக்குத் திரும்பி மே 11 முதல் மே 13 வரை தமக்கு நேர்ந்ததை நினைத்து மன ஆறுதல் பெற எண்ணிய தமிழ் மாணவர்களை அவர்களின் நிலையை உணராது அவர்களைத் தொடர்ந்தும் வகுப்புகளில் இருக்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். சர்வகலாசாலை தமிழ் மாணவர்களுக்குக் கல்வி கற்க ஏற்ற பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறிவிட்டது.</p>
<p>தமிழ் மாணவரை சர்வகலாசாலையிலிருந்து நிரந்தரமாக விரட்டிவிடுவதே தமிழ் மாணவர் மீதான தாக்குதலின் நோக்கமாக இருந்தது. முன்னுதாரணம் இல்லாத சர்வகலாசாலை நிர்வாகத்தின் நடத்தை தாக்குதலை நடத்தியவர்களின் எண்ணம் நிறைவேறக் காரணமாயிற்று. ஏறக்குறைய 95 வீதமான தமிழ் மாணவர் சர்வகலாசாலையை விட்டுத் தமது வீடுகளுக்குத் திரும்பி விட்டனர். இந்த மாதிரியான தமிழ் மாணவரின் ஒட்டு மொத்த வெளியேற்றத்தின் பின்னரும் சர்வகலாசாலை பாடங்களையும் தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தியது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சர்வகலாசாலை நிர்வாகம் தமிழ் மாணவருக்குச் சிறிதளவு இரக்கமும் காட்டத் தவறிவிட்டது.</p>
<p>1983 ஜூலையில் யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமையினால் தமிழ் மக்கள் மீது சிங்களவருக்கு வெறுப்பை மூட்டியது. இலங்கை இராணுவம் ஜூலை 24 முதல் 30 வரை தொடர்ச்சியான பதிலடித் தாக்குதலை எதுவித குற்றமும் செய்திராத அப்பாவித் தமிழர் மீது அவர்கள் தமிழராகப் பிறந்த காரணத்தால் நடத்தியது. தமிழரின் சொத்துக்களைச் சூறையாடல், சேதப்படுத்துதல் உட்பட இத்தாக்குதல் இருந்தது. இலங்கை அரச அதிகாரிகள் இவற்றைத் தடுக்க எதுவித முயற்சியும் எடுக்காது அரசு செயலிழந்து விட்டது எனக் கூறிக் கொண்டனர்.</p>
<p>ஜூலை 25 நள்ளிரவு வேளையில் மக்கள் கூட்டம் கையில் தமிழ் வாக்காளர் பதிவு இடாப்புகள் சகிதம் மின் சூள் வெளிச்சத்துடன் தமிழர்களின் வீடுகள், தொழில் நிறுவனங்களை அடையாளம் கண்டு அவற்றை சூறையாடி அழித்தனர். எல்லா வாகனங்களையும் மறித்துச் சோதனையிட்டு தமிழர் எவரேனும் தென்பட்டால் கொன்று ஊனப்படுத்தித் தீயிட்டுக் கொழுத்தினர். கண்ட சாட்சிகள் அந்தக் கூட்டத்தை இராணுவத்தினர் கை அசைத்து மகிழ்ந்ததையும் பதிலுக்கு மக்கள் கும்பலும் கை அசைத்துச் சென்றனர் எனவும் கூறியுள்ளனர்.</p>
<p>பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கோயில்களிலும் பாடசாலைகளிலும் புகலிடம் தேடினர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெலிக்கடைச் சிறையில் தடுத்து விளக்கமறியல் சிறைக்கைதிகள் 35 பேர் சிங்களச் சிறைக்கைதிகளினால் சிறைக்காவலரின் அனுசரனையுடன் கத்திகள், ஈட்டிகள,; பொல்லுகள், இரும்புச் சிலாகைகளினால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வன்செயல் ஏனைய நகரங்களான கம்பகா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, திருகோணமலைகளுக்கும் விரைந்து பரவியது. இந்திய வம்சாவழித் தமிழரின் நகரமான நுவரெலியா அருகேயுள்ள கந்தப்பொல முற்றாக துடைத்து அழிக்கப்பட்டது.</p>
<p>ஜூலை 26ந் திகதி இலங்கை அரசு தமிழர் எதிர்ப்பு வன்செயல் செய்திகளுக்கு ஊடகத் தணிக்கை முறையைக் கொண்டு வந்தது. இலங்கை அரசின் குழப்ப நிலை கண்கண்ட சாட்சிகளின் கூற்றுக்களாகவும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் ஒளிப் படங்களாலும் வன்முறையின் உண்மையான பரிமானம் தெரியவந்தது.</p>
<p>ஜூலை 27ல் முதற் படுகொலை நடந்து இரண்டாவது நாளில் மீண்டும் வெலிக்கடைச் சிறையில் 17 தமிழ் அரசியல் கைதிகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். உயிர் தப்பி மீதமிருந்த 36 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். சூறைச் சம்பவங்கள் தொடர்ந்தன, ஊரடங்கு வேளையும் நீடித்தது. கண்கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி கொழும்பு நகர வீதிகளில் கருகியும்; “புள்ளடி” அடையாளம் இடப்பட்ட பிரேதங்களும் காணப்பட்டன.</p>
<p>ஜூலை 28ல் அரச அதிபர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா தமிழருக்கு எதிரான வன்முறை தொடங்கிய பின்னர் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் எவராவது பிரிவினை பற்றிப் பேசினால் அவர் தமது “குடியுரிமை” இழப்பர் எனக் கூறி எரிகிற தீயில் எண்ணை ஊற்றும் பணியைச் செய்தார். மேலும் “&#8230;சிங்கள மக்களின் நாட்டைப் பிளவு படுத்தும் முயற்சியை முறியடிக்கும் குரலுக்கு இணங்க வேண்டிய காலம் வந்து விட்டது” என்றும் கூறினார்.</p>
<p>ஜூலை 29ல் கொழும்பிலிருந்து தமிழரை சரக்குக் கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. இடம் பெயர்ந்த மேலும் பல நூற்றுக் கணக்கானோர் சரக்குக் கப்பல் மூலமான அடுத்த பயணத்துக்காக யாழ்ப்பாணம் செல்லக் காத்திருந்தனர்.</p>
<p><span style="color: #ff0000;">தமிழர் இனிமேலும் இலங்கை அரசை நம்பத் தயாராக இல்லை</span></p>
<p>தமிழர் இனிமேலும் இலங்கை அரசை நம்ப முடியாது. முன்னர் பதவியில் இருந்த இலங்கைத் தலைவர்கள் கூட தமிழரின் அரசியல் கோரிக்கைகளை நிறை வேற்றித் தமிழரை அரவணைத்துக் கொண்டு அமைதிவழியில் இணைந்து வாழத் தவறியுள்ளனர் என்பதை அவர்களின் இனவெறிப் பேச்சுக்கள் காட்டி உள்ளன. தமிழ்த் தலைவர்கள் தனி நாடு கேட்கவில்லை. மாறாக இணைப்பாட்சி மூலம் தம்மைத் தாமே ஆழும் அரசமைப்பு முறையைத்தான் கேட்கின்றனர். ஆயினும் இலங்கைப் பேரினவாதம் தமிழரின் அமைதிவழிக் கோரிக்கையை வன்முறை கொண்டு எதிர்த்தனர். தமிழ் விடுதலைப் போராளிகள் வானத்திலிருந்து வந்தவர்கள் அல்ல மாறாக இலங்கை அரசினால் உருவாக்கப்பட்டவர்கள்.</p>
<p>1983 முதல் 2009 வரையான கொடிய போரினால் பத்து இலட்சத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டோடினர், உள் நாட்டில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து வாழுகின்றனர். ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் பேரைக் கொன்றும் முப்பதினாயிரம் பெண்களை விதவைகளாக்கியும் பல்லாயிரம் அநாதைகளை உருவாக்கியும் காயப்படுத்திய வடு ஆழமானது. இந்தக் காயத்தின் வடுவை உலகிலுள்ள தமிழ் மக்களின் மனதில் ஏற்படுத்திய இலங்கை அரசு நாட்டின் இரு இனங்களுக்கிடையில் நிகழ்ந்த இக்கொடும் போரின் பின்னரும் கூட ஒற்றை ஆட்சி முறையைக் கைவிட்டு இணைப்பாட்சி முறையில் சேர்ந்து வாழ மறுப்பதைக் காணும் அவலம் பரிதாபகரமானது.</p>
<p>எனவே சிங்களத்தினால் காயமடைந்து காயங்கள் புரையோடித் தத்தளிக்கும் தமிழ் மக்களை இணைந்து வாழக் கேட்பது யதார்த்த நிலைக்கு வெகு தூரத்தில் உள்ள கற்பனையாகும்.</p>
<p>தமிழ் மக்களை மறந்து மன்னித்து வாழக் கேட்பது மிகக் கோரமான தவறாகும். ஆனால் சர்வதேச சமூகம் இலங்கை அரசின் மீது அழுத்தத்தை பாவித்து தமிழருக்கான சுயாட்சி வழஙகித் தமிழரை மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை 1983 போன்றதொரு கொடுமைக்கு இலங்கை ஆளாக்காது என்று செயலால் உத்தரவாதமளிக்க வேண்டும். எனவே இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழருக்கு கறுப்பு ஜூலை என்றுமே மறக்க முடியாது உள்ளது. உலகெங்கும் உள்ள கறுப்பு இன மக்களுக்கு எப்படி பெப்ருவரி எப்படியோ தமிழருக்கும் ஜூலையும் உள்ளது.</p>
<p>தமிழருக்கு இந்த மாதம் சிந்தனைக்கும் நினைவு கூரவும் செய்ய வேண்டிய மாதம். மேலும் இந்த ஆண்டின் நினைவு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009 வன்னியில் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் பல்லாயிரம் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் தமிழர் பல ஆர்ப்பாட்டங்களை “மீண்டும் எழுவோம்” எனப் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தி சர்வதேச சமூகத்தை அதிகளவு அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புகள் மூலம் இலங்கை அரசை தமிழ் மக்களுக்கு சுதந்திரமும் நீதியும் கொண்ட தீர்வை முன்வைத்து அவர்கள் தமது தாயகத்தில் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழ வழி செய்ய நிர்பந்திக்க வேண்டும்.</p>
<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/Revolution.bmp"><img class="alignnone size-full wp-image-395" title="Revolution" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/Revolution.bmp" alt="" /></a></p>
<p><strong><em>தொல்காப்பியன்</em></strong><strong><em></em></strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&amp;p=390</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்-புலிகள்</title>
		<link>http://www.thanall.com/?p=386</link>
		<comments>http://www.thanall.com/?p=386#comments</comments>
		<pubDate>Fri, 23 Jul 2010 16:56:13 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=386</guid>
		<description><![CDATA[கறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் அவலம் இன்னும் முடியவில்லை என உணர்த்தவும் நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழ தனியரசே தீர்வென சர்வதேசத்துக்கு உரத்துக் கூறிடுவோம். இவ்வாறு  தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை!

அறிக்கையின் முழுவடிவம்:
தலமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.
 
எமது அன்புக்குரிய தமிழ் மக்களே!
 
ஜூலை 23, இன்றோடு இருபத்தேழு ஆண்டுகளாகின்றது &#8211; யூலைக் கலவரம். சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்தின் கொடூரமான கரங்களில் தமிழினம் அவலத்தை அனுபவித்த துயரமான நாள். யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/LTTE-Control.jpg"><img class="alignleft size-full wp-image-387" title="LTTE Control" src="http://www.thanall.com/wp-content/uploads/2010/07/LTTE-Control.jpg" alt="" width="120" height="101" /></a>கறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் அவலம் இன்னும் முடியவில்லை என உணர்த்தவும் நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழ தனியரசே தீர்வென சர்வதேசத்துக்கு உரத்துக் கூறிடுவோம். இவ்வாறு  தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை!</p>
<p><span id="more-386"></span></p>
<p>அறிக்கையின் முழுவடிவம்:</p>
<p>தலமைச்செயலகம்,<br />
தமிழீழ விடுதலைப்புலிகள்,<br />
தமிழீழம்.<br />
 <br />
எமது அன்புக்குரிய தமிழ் மக்களே!<br />
 <br />
ஜூலை 23, இன்றோடு இருபத்தேழு ஆண்டுகளாகின்றது &#8211; யூலைக் கலவரம். சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்தின் கொடூரமான கரங்களில் தமிழினம் அவலத்தை அனுபவித்த துயரமான நாள். யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ பல்லாயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களை, அவமானங்களைச் சந்தித்திருக்கின்றோம், சந்தித்துவருகின்றோம்.</p>
<p>காலனித்துவ ஆதிக்கத்துக்குப் பின்னரான காலத்தில் தமிழ் மக்கள் தமது தாயகமண்ணில் பூரண சுதந்திரத்தை இழந்து சிறீலங்காவின் இனவெறி ஆட்சிக்குட்பட்டு சிக்கிச் சீரழிந்து வருகின்றனர். சமாதானம் பேசவந்த வல்லூறுகளினாலும், உலக ஆதிக்க சக்திகளினாலும், துரோகத்தனங்களினாலும் எமதியக்கம் முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக மௌனித்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இன்றுவரையான நாட்களில் இச்சக்திகள் எவையும் எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை.</p>
<p>மக்களின் விடிவுக்காகப் போராடிய எம்மை, பயங்கரவாதிகளாக்க முற்பட்ட சிறீலங்கா தற்போது ஐ.நாவின் பிடியில் சிக்கியுள்ளது.<br />
இதுவரைகாலமும் இனவெறி கொண்ட சிறீலங்காவிடம் நாம் பட்ட துன்பத்தை தற்போது சர்வதேசம் அனுபவிக்கின்றது. இந்தசாதகமான சூழலை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். உலகில் பரந்து வாழும் தமிழினம் ஒன்றுபட்டு உரத்துக் குரல் கொடுக்கவேண்டும். இந்நிலையில், கறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் அவலம் இன்னும் முடியவில்லை என உணர்த்தவும் நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழ தனியரசே தீர்வென சர்வதேசத்துக்கு உரத்துக் கூறிடுவோம்.</p>
<p>தலமைச்செயலகம்,<br />
தமிழீழ விடுதலைப்புலிகள்,<br />
தமிழீழம்.</p>
<div>தமிழீழத்தின் குரல் </div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&amp;p=386</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
